கொரோனவால் பாதிக்கப்பட்ட 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் நடிகர்..! அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் நடித்து வரும், முக்கிய பிரபலம் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது அதில் இருந்து மீண்ட தகவலை சமூக வலைத்தளத்தில் அவரே கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் நடித்து வரும், முக்கிய பிரபலம் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது அதில் இருந்து மீண்ட தகவலை சமூக வலைத்தளத்தில் அவரே கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணன் - தம்பிகள் பாசம், மற்றும் கூட்டு குடும்பத்தில் உள்ள அன்பை எடுத்து கூறும் விதமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'.
இதில் நடித்து வரும் அனைத்து நடிகர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த இந்த சீரியல் பிரபலம் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது அதில் இருந்து மீண்டுள்ளார்.
'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் ஜீவா என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். இவருக்கு தான் கொரோனா தொற்று ஏற்றப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, கடந்த 20 நாட்களாக தனிமையில் இருந்து சிகிச்சை பெற்ற பின் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதாகவும், இந்த நாட்கள் மிகவும் கடுமையானது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்டுள்ள வெங்கட் உடல் நிலை குறித்து ரசிகர்கள் பலர் நலம் விசாரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.