கர்சீப்பைக் கட்டிக்கொண்டு கவர்ச்சி கலவரமூட்டும் யாஷிகா... அதிர்ச்சியில் உறையவைக்கும் அட்ராசிட்டி கிளிக்...!
அப்படி தற்போது யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சி புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் 16’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார். இதில் எந்த படமும் பெரிதாக கைக்கொடுக்கவில்லை.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன்தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜ பீம்மா, எஸ் ஜே சூர்யாவுடன் கடமையை செய், பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
மாடலிங், சினிமா என இரட்டை குதிரையில் பிசியாக சவாரி செய்தாலும் ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றுவதில் யாஷிகா நிறுத்துவதே இல்லை.
அதுவும் சில சமயங்களில் ஓவர் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றவும் செய்கிறார். அப்படி தற்போது யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள போட்டோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ரெட் கலர் பேண்ட் அணிந்துள்ள யாஷிகா கர்சீப் போன்ற டாப்பை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த முதுகும் அதில் இருக்கும் பெரிய சைஸ் டாட்டூவும் தெரிய பளீச் போஸ் கொடுத்திருக்கிறார்.அதை பார்க்கும் ரசிகர்கள் இப்படியெல்லாம் கேவலமான உடையில் ஏன் போட்டோ பதிவிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.