Asianet News TamilAsianet News Tamil

Breaking: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் பணிபுரிந்த பெண் தற்கொலை முயற்சி!

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் ஞானவேல் ராஜாவின் வீட்டில் பணிபுரிந்து வந்த வேலைக்கார பெண் திடீர் என தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Gnanavel Raja house keeping woman attempted suicide mma
Author
First Published Apr 25, 2024, 3:30 PM IST

தமிழில் தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவன தலைவர், தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சில்லுனு ஒரு காதல்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இதை தொடர்ந்து, சிங்கம், நான் மஹான் அல்ல, பிரியாணி, பத்து தல போன்ற 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.

தற்போது சூர்யா நடிப்பில் பிரமாண்ட பட்ஜட்டில் உருவாகியுள்ள கங்குவா படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் இவரின் வீடு தி.நகரில் உள்ள நிலையில் அங்கு மனைவி நேகா மற்றும் தன்னுடைய பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் பணிபுரிந்து வந்த வேலைக்கார பெண் லட்சுமி என்பவர், திடீர் என தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Gnanavel Raja house keeping woman attempted suicide mma

Ramya Krishnan Net Worth: 53 வயதிலும் மகாராணி போல் வாழும் ரம்யா கிருஷ்ணா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள தகவலில், ஞானவேல் ராஜாவின் மனைவி நேகாவின் தங்க நகைகள் சமீபத்தில் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, அவரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் மற்றும், வீட்டில் வேலை செய்பவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர் போலீசார். லட்சுமியிடம் போலீசார் விசாரித்தபோது அவருக்கும், இந்த திருட்டுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக லட்சுமி கூறியுள்ளார்.

Gnanavel Raja house keeping woman attempted suicide mma

Sun TV Serial: சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சலுக்கு போட்டியாக சன் டிவியில் ஆரம்பமாகும் புத்தம் புதிய 6 சீரியல்கள்!

எனினும் மீண்டும் காவல் நிலையத்திற்கு லட்சுமியை அழைத்து விசாரணை செய்ததோடு, எழுதி வாங்கிக்கொண்டு அவரை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான, லட்சுமி தந்நடுய்ய வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் லட்சுமியை மீது மருத்துவமனையில் அனுபதித்தனர். தற்போது லட்சுமியின் மகள் கொடுத்த புகாரில், நேகா தன்னுடைய தங்க நகைகளை வேறு எங்கோ தொலைத்து விட்டு ஏழைகள் என்பதால் எங்களை கை காட்டுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். லட்சுமியின் மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது... போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios