தொடர்ந்து 10 படங்கள் பிளாப்; ஆனாலும் 20 கோடி சம்பளம் கேட்கும் இந்த நடிகை யார் தெரியுமா?
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒருவர், 40 வயதான பின்னரும் தனக்கு 20 கோடி சம்பளம் வேண்டும் என கேட்டுள்ளாராம். அவர் யார் என்பதை பார்க்கலாம்.

Nayanthara Increase her Salary Suddenly : தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டவர் நயன்தாரா, 40 வயதிலும் தனது சம்பளத்தை உயர்த்தி வருகிறார். அடுத்த படங்களுக்கு ரூ.20 கோடி சம்பளம் கேட்கிறார் என்ற தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டும் உறுதியானால், இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முன்னணியில் இருப்பார் நயன்.
சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு, தமிழ், கன்னட சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நயன்தாரா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் வெற்றி பெற்றுள்ளார். ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகி வெற்றி பெற்றதால், அவரது மார்க்கெட் ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியாக பிளாப் படங்கள் கொடுத்த நயன்தாரா
இந்த வெற்றிக்குப் பிறகு, நயன்தாரா தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தியுள்ளார். அடுத்த படங்களுக்கு ரூ.20 கோடி கேட்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது. இது தென்னிந்திய சினிமாவில் வேறு எந்த நடிகைக்கும் இல்லாத அளவுக்கு அதிகம். நயன்தாரா பாலிவுட்டில் வெற்றியடைந்தாலும், தமிழில் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த 10 படங்கள் தோல்வியை தான் சந்தித்துள்ளன
நயன்தாரா சம்பள உயர்வுக்கு காரணம் என்ன?
'ஜவான்' படத்தின் உலகளாவிய வெற்றிதான் நயன்தாராவின் சம்பள உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் பாலிவுட் ரசிகர்களையும் சென்றடைந்துள்ளார். இதனால் அவர் நடிக்கும் படங்களுக்கு பாலிவுட்டிலும் மவுசு அதிகரித்துள்ளது என்பதால் சம்பளத்தை கணிசமாக அவர் உயர்த்தி உள்ளாராம்.
நயன்தாரா சம்பளம் எவ்வளவு?
தமிழில் தொடர் தோல்விப் படங்களை நயன்தாரா கொடுத்து வந்தாலும், அவரது நட்சத்திர அந்தஸ்து மற்றும் படத்திற்கு அவர் கொண்டு வரும் விளம்பரத்தை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் அவரது கோரிக்கையை ஏற்க வாய்ப்புள்ளது. நயன்தாராவின் சம்பளம் குறித்த செய்தி தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளமாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது.