MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘நானே வருவேன்’னு அடம்பிடித்த தனுஷுக்கு ஆப்பு வச்ச பொன்னியின் செல்வன்! தனுஷ் படத்தின் 2ம் நாள் வசூல் இவ்ளோ தான்

‘நானே வருவேன்’னு அடம்பிடித்த தனுஷுக்கு ஆப்பு வச்ச பொன்னியின் செல்வன்! தனுஷ் படத்தின் 2ம் நாள் வசூல் இவ்ளோ தான்

நானே வருவேன் படம் பெரிய அளவில் புரமோஷன் எதுவும் இன்றி ரிலீஸ் ஆனாலும் முதல் நாளில் ரூ.10.5 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

2 Min read
Ganesh A
Published : Oct 01 2022, 11:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படைப்பாக பொன்னியின் செல்வன் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்படத்தை கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு ஜாம்பவான் இயக்குனர்கள் எடுக்க முயன்றனர். அவையெல்லாம் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது மணிரத்னம் தனது விடாமுயற்சியால் வெற்றிகரமாக அப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.

சுமார் 800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் மணிரத்னம். அதன்படி இப்படத்தின் முதல்பாகம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இது தமிழ் சினிமாவின் பெருமைமிக்க படைப்பாக கருதப்படுவதனால் இப்படத்துடன் பிற நடிகர்களின் படங்கள் மோதலை தவிர்த்து வந்த நிலையில், தனுஷின் நானே வருவேன் படம் மட்டும் அப்படத்துக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்தனர்.

24

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பின. தனுஷ் ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ரிலீஸ் செய்வதில் உறுதியாக இருந்தார். வரிசையாக 9 நாட்கள் விடுமுறை வருவதால் அதனை மிஸ் பண்ண விரும்பவில்லை என்றும் அதனால் தான் நானே வருவேன் படத்தை தற்போது ரிலீஸ் செய்வதாகவும் கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... நடிகர் திலகத்தின் பிறந்தநாள்... சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

34

நானே வருவேன் படம் பெரிய அளவில் புரமோஷன் எதுவும் இன்றி ரிலீஸ் ஆனாலும் முதல் நாளில் ரூ.10.5 கோடி வசூலித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. முதல் நாளில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததை அடுத்து தயாரிப்பாளர் தாணு இயக்குனர் செல்வராகவனை நேரில் சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.

44

ஆனால் நேற்று பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆனதால் நானே வருவேன் படத்தின் 2-ம் நாள் வசூல் மரண அடி வாங்கி உள்ளது. இப்படம் 2-ம் நாளில் ரூ.4 கோடி மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. முதல் நாளோடு ஒப்பிடுகையில் இது 60 சதவீதம் குறைவாகும். இந்த அளவு வசூல் சரிந்ததற்கு பொன்னியின் செல்வன் மட்டும் காரணமல்ல, இப்படத்தின் கதையும் தான். முதல் பாதி சூப்பராகவும், இரண்டாம் பாதி படு போராக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. இன்றும் நாளையும், விடுமுறை நாட்கள் என்பதால், இப்படத்தின் வசூல் மீளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... அடேங்கப்பா.. ஒரே நாளில் இத்தனை கோடியா...! வியக்க வைக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்
செல்வராகவன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved