MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நா.முத்துக்குமார் சென்சார் போர்டுக்கே விபூதி அடித்த கதை தெரியுமா? கவிஞரின் தக் லைஃப் சம்பவம்..!

நா.முத்துக்குமார் சென்சார் போர்டுக்கே விபூதி அடித்த கதை தெரியுமா? கவிஞரின் தக் லைஃப் சம்பவம்..!

கவிஞர் நா முத்துக்குமார் மிகவும் விருப்பப்பட்டு எழுதிய பாடல் வரிகளை சென்சார் போர்டு அதிகாரிகள் கத்திரிபோட்டு நீக்கி இருக்கிறார்கள். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 14 2026, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Na Muthukumar Song Secret
Image Credit : facebook/na.muthukumar

Na Muthukumar Song Secret

பாடல் வரிகளால் மனிதர்களின் மனதைத் தொட்டு, சாதாரண வார்த்தைகளையே கவிதையாக்கும் திறமை கொண்டவர் தான் நா.முத்துக்குமார். 2016-ஆம் ஆண்டு அவர் மறைந்தாலும், அவர் எழுதிய பாடல் வரிகள் இன்றும் ரசிகர்களின் மனங்களில் நங்கூரமாய் பதிந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் அவர் உருவாக்கிய வெற்றிடத்தை இன்று வரை யாராலும் நிரப்ப முடியாத நிலையே உள்ளது. அந்த அளவுக்கு தனித்துவமான மொழியும், ஆழமான உணர்வும் கொண்ட பாடலாசிரியராக நா.முத்துக்குமார் திகழ்ந்தார்.

24
நா முத்துக்குமார் பாடல் சீக்ரெட்
Image Credit : facebook/na.muthukumar

நா முத்துக்குமார் பாடல் சீக்ரெட்

இன்று தமிழ் சினிமாவில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது சென்சார் போர்டு விஷயம் தான். சென்சார் போர்டு பிரச்சனையால் விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இந்த சென்சார் போர்டு படங்களுக்கு மட்டுமல்ல பாடல்களுக்கும் கத்திரி போட்ட சம்பவங்கள் இருக்கின்றன. அப்படி நா முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு சென்சார் போர்டு கத்திரி போட்டிருக்கிறது. அது எந்தப் பாடல் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

2001-ஆம் ஆண்டு மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான ‘டும் டும் டும்’ திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருந்தார். அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அத்தான் வருவாக’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலுக்காக நா.முத்துக்குமார் ஆரம்பத்தில் எழுதிய வரிகளில், புத்தன்கூட காதலித்தால் புத்தி மாறுவானே... போதிமர உச்சியிலே ஊஞ்சல் ஆடுவானே என எழுதி இருந்தார்.

Related Articles

Related image1
ஒரு கவிதையை சூப்பர் ஹிட் பாடலாக மாற்றி மனதை உருக வைத்த நா முத்துக்குமார்!
Related image2
கண்ணதாசனின் வரிகளை அலேக்காக காப்பி அடித்து; நா முத்துக்குமார் எழுதிய சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
34
கத்திரி போட்ட சென்சார் போர்டு
Image Credit : facebook/na.muthukumar

கத்திரி போட்ட சென்சார் போர்டு

ஆனால், அந்த வரிகளை கேட்ட சென்சார் போர்டு அதிகாரிகள், புத்தரைப் பற்றி இப்படி எழுதுவது தவறு எனக் கூறி, அந்தப் பகுதியை நீக்க உத்தரவிட்டார்களாம். இதையடுத்து, நா.முத்துக்குமார் புத்தன்என்பதற்குப் பதிலாக சித்தன் என்றும், போதிமரத்திற்கு பதிலாக ஆலமரம் என்றும் மாற்றி, வரிகளைத் திருத்திக் கொடுத்தார். பாடல் வெளியானாலும், தன் விருப்பமான வரிகள் நீக்கப்பட்டதற்கான வருத்தம் அவருக்குள் இருந்ததாம்.

அந்த ஆதங்கம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. 2003-ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘சாமி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அய்யய்யோ அய்யய்யோ புடிச்சிருக்கு’ என்ற பாடலில், அவர் மீண்டும் அதே வரிகளை சற்று பட்டி டிங்கரிங் பார்த்து பயன்படுத்தினார். இந்தமுறை, “காதல் வந்து நுழைந்தால் போதிமரக் கிளையில், ஊஞ்சல் கட்டி புத்தன் ஆடுவான்” என்று எழுதி, தன் ஆசைப்பட்ட உவமையை புத்திசாலித்தனமாக படத்தில் இடம் பெறச் செய்தார்.

44
ட்விஸ்ட் வைத்த நா முத்துக்குமார்
Image Credit : facebook/na.muthukumar

ட்விஸ்ட் வைத்த நா முத்துக்குமார்

ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், இந்த வரிகள் சென்சார் போர்டின் கவனத்திற்கு வராமல், அப்படியே பாடலில் இடம்பெற்றுவிட்டன. இதன் மூலம், ஒருகாலத்தில் நீக்கப்பட்ட தன் வரிகளை வேறொரு படத்தில் வெற்றிகரமாக பயன்படுத்திய சந்தோஷத்தில் நா.முத்துக்குமார் இருந்ததாக கூறப்படுகிறது. சென்சார் போர்டுக்கே விபூதி அடித்து தான் ஆசைப்பட்டு எழுதிய பாடல் வரிகளை படத்தில் இடம்பெறச் செய்த நா முத்துக்குமாரின் தக் லைஃப் சம்பவம் மீண்டும் வைரலாகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நா. முத்துக்குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டூ நேஷனல் அவார்டு வின்னர்! அஜித்திற்கும் பிரபுதேவாவிற்கும் குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!
Recommended image2
வாழ்க்கையா? பணமா? காதல் கோட்டை படத்திற்காக அஜித் செய்த அந்தப் பெரிய தியாகம்.. இன்று வரை யாருக்கும் தெரியாத உண்மை!
Recommended image3
டான் 3 சர்ச்சை: ரன்வீர் சிங் 40 கோடி கொடுப்பாரா? அல்லது ஃபர்ஹான் அக்தர் கோர்ட்டுக்கு செல்வாரா?
Related Stories
Recommended image1
ஒரு கவிதையை சூப்பர் ஹிட் பாடலாக மாற்றி மனதை உருக வைத்த நா முத்துக்குமார்!
Recommended image2
கண்ணதாசனின் வரிகளை அலேக்காக காப்பி அடித்து; நா முத்துக்குமார் எழுதிய சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved