MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரு கவிதையை சூப்பர் ஹிட் பாடலாக மாற்றி மனதை உருக வைத்த நா முத்துக்குமார்!

ஒரு கவிதையை சூப்பர் ஹிட் பாடலாக மாற்றி மனதை உருக வைத்த நா முத்துக்குமார்!

கவிஞர் நா முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளான இன்று அவர் எழுதிய ஒரு சூப்பர் ஹிட் பாடலின் சிறப்பம்சம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 12 2025, 06:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Na Muthukumar Birthday
Image Credit : facebook/na.muthukumar

Na Muthukumar Birthday

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு கலைஞர்களில் நா முத்துக்குமாரும் ஒருவர். அவரது 50வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வண்ணம் இருக்கிறது. ஜிவி பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி அறிமுக இசையமைப்பாளர்களுக்கும் பல ஹிட் பாடல்களை நா முத்துக்குமார் கொடுத்திருக்கிறார். அப்படி அவர் எழுதிய ஒரு மாஸ்டர் பீஸ் பாடலை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
நா முத்துக்குமார் பாடல் ரகசியம்
Image Credit : facebook/na.muthukumar

நா முத்துக்குமார் பாடல் ரகசியம்

நா முத்துக்குமார் குறுந்தொகை என்கிற தலைப்பில் காதல் கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார். ஒரு காதலன் தன்னுடைய காதலியை எப்பயெல்லாம் பார்த்துக் கொள்வேன் என்பதை சொல்வதைப் போல் அந்த கவிதை அமைந்திருக்கும். அதில், “விடிகாலை நீ தூங்க விண்மீனில் விளக்கு வைப்பேன்... வெந்நீரில் நீ குளிக்க விறகாகி தீக்குளிப்பேன்” என்கிற வரியை எழுதி இருப்பார். இந்த வரியை ஏதோ ஒரு பாடலில் கேட்டது போல் இருக்கிறதா... ஆம் இதை ஒரு பாடலிலும் பயன்படுத்தியிருக்கிறார் நா முத்துக்குமார். அது என்ன பாடல் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Related Articles

Related image1
Flash Back : இறக்கும் வரை கரும்பை சாப்பிடாத நா.முத்துக்குமார்.! பின்னால் உள்ள சோகமான சம்பவம் என்ன தெரியுமா?
Related image2
‘ஐயர் பொண்ணு மீன் வாங்க வந்தா’ நா முத்துக்குமார் பாடல் வரியில் ஒளிந்துள்ள ரியல் லவ் ஸ்டோரி!
34
கவிதையை பாடலாக மாற்றிய நா முத்துக்குமார்
Image Credit : facebook/na.muthukumar

கவிதையை பாடலாக மாற்றிய நா முத்துக்குமார்

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தில், ஜோஷ்வா ஸ்ரீதர் இசையில் ஹரிச்சரண் பாடிய ‘உனக்கென இருப்பேன்’ என்கிற பாடலில் தான் நா முத்துக்குமார், தன்னுடைய கவிதையில் எழுதிய அதே வரிகளை பயன்படுத்தி இருந்தார். “வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை... வருங்காலம் காயம் ஆச்சு” இது ஒரு பெரும் சோகத்தை கடத்தும் வரிகளாக இருந்தாலும், அந்த சோகத்தில் இருந்து மீண்டு வர நம்பிக்கை கொடுக்கும் வரிகளாகவும் இருக்கும். காதல் படத்தில் எழுதிய இந்த வரிகளை பாடலாசிரியர் நா முத்துக்குமார் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த ஒரு சூப்பர் ஹிட் பாடலிலும் பயன்படுத்தி இருப்பார்.

44
நா முத்துகுமாரின் வார்த்தை ஜாலம்
Image Credit : facebook/na.muthukumar

நா முத்துகுமாரின் வார்த்தை ஜாலம்

“கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா” என காதல் படத்தில் எழுதிய பாடல் வரியை தேவதையை கண்டேன் படத்தில் “கல்லறை மேல்தான் வைத்திடும் பூக்கள் கூந்தலை சேராதே” என அந்த சூழலுக்கு ஏற்றார் போல் எழுதி இருப்பார். இப்படி கல்லறை, பூக்கள் என இரண்டையும் தொடர்பு படுத்தி கவிஞர் நா முத்துக்குமார் வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு சிச்சுவேஷன்களுக்கு ஏற்றார் போல் அழகாக எழுதியிருப்பார். அதுமட்டுமின்றி தேவதையை கண்டேன் பட பாடலில் வரும் லிரிக்கை டங் ட்விஸ்ட்டர் போல் எழுதியிருப்பார். அது என்ன வரி என்றால், “தோழியாய் என்னை சுழற்றினாய் சூழ்நிலை திசை மாற்றினாய்” என்கிற வரி தான். இந்த வரியை வேகமாக சொல்லிப் பாருங்கள் அது எவ்வளவு கஷ்டம் என்பது உங்களுக்கே புரியும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நா. முத்துக்குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
Recommended image2
Serial: ரூ.18 லட்சத்தை ஏமாற்றிவிட்டார்.! நடிகை ராதிகா சரத்குமார் மீது பகீர் புகார்களை அடுக்கிய பிரபல நடிகை.!
Recommended image3
Music: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே.! இளையராஜா இசைத்த மெலடி.! மெய் மறந்து கேட்டு கண்ணீர் வடித்த பாலச்சந்தர்.!
Related Stories
Recommended image1
Flash Back : இறக்கும் வரை கரும்பை சாப்பிடாத நா.முத்துக்குமார்.! பின்னால் உள்ள சோகமான சம்பவம் என்ன தெரியுமா?
Recommended image2
‘ஐயர் பொண்ணு மீன் வாங்க வந்தா’ நா முத்துக்குமார் பாடல் வரியில் ஒளிந்துள்ள ரியல் லவ் ஸ்டோரி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved