‘மாநாடு’ பட நைட் ஷூட்டிங்கில் சிம்பு செய்த காரியம்... எஸ்.டி.ஆர். ரசிகர்களை மெர்சலாக்கிய போட்டோஸ்...!
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு அப்துல் காலிக் என பெயரிடப்பட்டுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு அப்துல் காலிக் என பெயரிடப்பட்டுள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். மேலும் ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
சென்னை, ஐதராபாத், பாண்டிச்சேரி என பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமெடுத்து வருகிறது. மாநாடு படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்புவை எளிய மனிதர் என குறிப்பிட்டு படப்பிடிப்பு தளத்தில் எடுத்த 2 புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு போட்டோவில் சிம்பு, மண் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார்.
மற்றொரு படத்தில் தரையில் படுத்திருக்கும் சிம்புவின் பக்கத்தில் நின்று எஸ்.ஜே.சூர்யா பேசிக் கொண்டிருக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்து மெய் சிலிர்த்துப் போன சிம்பு ரசிகர்கள் பாருங்க எங்க எஸ்.டி.ஆர்.எளிமையை என காட்டும் விதமாக சோசியல் மீடியாவில் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.