அரண்மனையில் ஐ.ஜி. மகனை கரம் பிடித்த பெரிய வீட்டு நாயகி... கோலாகலமாக நடந்த நிஹாரிகா - சைதன்யா திருமணம்!
இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள உதய் நிவாஸ் அரண்மனையில் நிஹாரிகா, சைதன்யா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நாகேந்திர பாபுவின் மகள் நிஹாரிகாவுக்கும், குண்டூர் ஐஜியின் மகன் சைதன்யா ஜொன்னலகட்டாவுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள உதய் நிவாஸ் அரண்மனையில் நிஹாரிகா, சைதன்யா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
தெலுங்கு திரையுலகின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திருமணத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவர் ஸ்டார் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம் சரண்,ல் வருண் தேஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதற்கு முன்னதாக உதய்பூர் அரண்மனையில் நடந்த ஹல்தி, சங்கீத், மெகந்தி நிகழ்ச்சிகளில் ஸ்டார் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டு ஜாலியாக இருந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி தாறுமாறு வைரலானது.
அதுமட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரும் உதய்பூருக்கு தனி விமானத்தில் சென்ற புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியானது .
தன்னை அன்புடன் அப்பா என அழைக்கும் தம்பி மகள் நிஹாரிகாவிற்காக சிரஞ்சீவி சுமார் 1.5 கோடி மதிப்புள்ள ஆடம்பர நகைகளை பரிசாக வழங்கியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
கலகலப்பாக நடக்கும் திருமண சடங்கு
அண்ணன் மகள் திருமணத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண்
செல்ல மகளுடன் சேர்ந்து போஸ் கொடுக்கும் நாக பாபு