MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் மனைவியோடு மகளிர் ஆணையத்தில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ்... புது குண்டை தூக்கிப்போட்ட ஜாய் கிரிசில்டா

முதல் மனைவியோடு மகளிர் ஆணையத்தில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ்... புது குண்டை தூக்கிப்போட்ட ஜாய் கிரிசில்டா

ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரின் பேரில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் இன்று சென்னையில் உள்ள மகளிர் ஆணையத்தில் தன் மனைவி ஸ்ருதி உடன் ஆஜர் ஆனார்.

2 Min read
Ganesh A
Published : Oct 16 2025, 02:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
Madhampatty Rangaraj vs Joy Crizildaa
Image Credit : X

Madhampatty Rangaraj vs Joy Crizildaa

சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக கூறி ஆடை வடிவமைப்பாளர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மகளிர் ஆணையத்தை நாடினார் ஜாய். இதையடுத்து விசாரணையை தொடங்கிய மகளிர் ஆணையம், மாதம்பட்டி ரங்கராஜ் அக்டோபர் 15ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியது. ஆனால் நேற்று ஆஜர் ஆக முடியாததால் ஒரு நாள் அவகாசம் கேட்டிருந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.

மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்

இந்த நிலையில், இன்று மாதம்பட்டி ரங்கராஜ், மகளிர் ஆணையத்தில் ஆஜராக வந்திருந்தார். அப்போது அவரின் மனைவி ஸ்ருதியுடன் உடன் வந்திருந்தார். இருவரும் கைகோர்த்தபடி உள்ளே சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாதம்பட்டி ரங்கராஜை தொடர்ந்து ஜாய் கிரிசில்டாவும் விசாரணைக்காக ஆஜர் ஆனார். இதனால் மகளிர் ஆணைய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஜாய் கிரிசில்டா, மிகவும் சிரமப்பட்டு காரில் இருந்து இறங்கி வந்து விசாரணைக்கு ஆஜர் ஆனார்.

22
ஜாய் கிரிசில்டா நோட்டீஸ்
Image Credit : instagram/joycrizildaa

ஜாய் கிரிசில்டா நோட்டீஸ்

மகளிர் ஆணையத்தில் ஆஜராகும் முன்பாக நேற்று மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில் ஜாய் கிரிசில்டா தரப்பு கோர்ட்டுக்கு வெளியிலேயே இந்த பிரச்சனையை பேசி முடிக்க முயல்வதாகவும், ஆனால் நான் இதை சட்டப்படி நீதிமன்றம் வாயிலாக தான் எதிர்கொள்வேன் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், அவதூறான கருத்துக்களுடன் கூடிய இந்த அறிக்கையை நீக்கக் கோரி ஜாய் கிரிசில்டா தரப்பில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜுக்கு அடுத்த ஆப்பு

இந்த விவகாரத்தை கோர்ட்டுக்கு வெளியே பேசி முடித்துக் கொள்வதாக தங்கள் தரப்பு கூறியதாக மாதம்பட்டி ரங்கராஜ் சொல்வது பொய் என்றும், இந்த அறிக்கையை மாதம்பட்டி ரங்கராஜ் திரும்பப் பெறுவதோடு, அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கோர்ட்டுக்கு வெளியே பேசி முடித்துக் கொள்ளலாம் என தங்களை அணுகியவர்கள் யார் என்கிற விவரத்தை மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட வேண்டும் என்றும், தவறினால் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ஜாய் கிரிசில்டா அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Related Articles

Related image1
ஜாய் கிரிசில்டா கொடுத்த புகார் எதிரொலி... மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளிர் ஆணையம் வைத்த செக்
Related image2
என்னெல்லாம் கட்டுக் கதை விடுறான் பாருங்க; அறிக்கை வெளியிட்ட மாதம்பட்டியை நோஸ்கட் பண்ணிய ஜாய் கிரிசில்டா..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved