MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஜாய் கிரிசில்டா கொடுத்த புகார் எதிரொலி... மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளிர் ஆணையம் வைத்த செக்

ஜாய் கிரிசில்டா கொடுத்த புகார் எதிரொலி... மாதம்பட்டி ரங்கராஜுக்கு மகளிர் ஆணையம் வைத்த செக்

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்த நிலையில், தற்போது அடுத்தக்கட்ட ஆக்‌ஷன் எடுக்கப்பட்டு உள்ளது.

1 Min read
Ganesh A
Published : Oct 14 2025, 04:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Summon to Madhampatty Rangaraj
Image Credit : x/joy_stylist

Summon to Madhampatty Rangaraj

நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், தன்னிடம் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாய் கிரிசில்டா என்பவரை காதலித்து அவரை திருமணம் செய்துகொண்டது மட்டுமின்றி கர்ப்பமான பின்னர் அவரை ஏமாற்றி இருக்கிறார். முதல் மனைவி இருக்கும் போதே மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆனது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

24
ஜாய் கிரிசில்டா புகார்
Image Credit : @Madhampatty Rangaraj

ஜாய் கிரிசில்டா புகார்

இந்த நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே தன்னைப்பற்றி அவதூறு பரப்ப ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்ககோரி நீதிமன்றத்தை நாடினார் மாதம்பட்டி. ஆனால் அவருக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

Related Articles

Related image1
மனைவிகள் யாரும் இல்லாமல் தனியாக பூஜை போட்ட மாதம்பட்டி..! டெல்லியில் புதிய டிபன் சென்டர் திறப்பு
Related image2
ஹலோ டேடி... ஆரம்பிக்கலாமா? போட்டோ போட்டு மாதம்பட்டி ரங்கராஜை சீண்டிய ஜாய் கிரிசில்டா
34
மகளிர் ஆணையத்தில் புகாரளித்த ஜாய்
Image Credit : X

மகளிர் ஆணையத்தில் புகாரளித்த ஜாய்

இதனிடையே தான் காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அப்செட் ஆன ஜாய் கிரிசில்டா, கடந்த வாரம் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில், புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், மாதம்பட்டி ரங்கராஜ் திருமண மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதோடு, அவர் தன்னைப்போல் 10 பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் கூறி அதிர வைத்தார் ஜாய் கிரிசில்டா.

44
மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன்
Image Credit : JioHotstar/Screenshot

மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன்

இந்த நிலையில், ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி நாளை (அக்டோபர் 15) மகளிர் ஆணையத்தில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதேபோல் ஜாய் கிரிசில்டாவும் நாளை ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்துள்ளது. நாளை மாதம்பட்டி ரங்கராஜ், விசாரணைக்கு ஆஜர் ஆவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved