MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தவறான வார்த்தை தான்... 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வரிகளுக்கு மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர் மணிமாறன்..!

தவறான வார்த்தை தான்... 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வரிகளுக்கு மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர் மணிமாறன்..!

'விருமன்' படத்தில் இடம்பெற்ற, கஞ்சா பூ பாடல் பாடலுக்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார் இந்த பாடலை எழுதியுள்ள மணிமாறன்.  

2 Min read
manimegalai a
Published : Aug 21 2022, 07:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நடிகர் கார்த்தி - அதிதி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், 'விருமன்'. திரையரங்குகளில் சில படங்கள் நான்கு நாட்கள் கூட தாக்குப்பிடிக்க கஷ்டப்பட்டு வரும் நிலையில், விருமான் திரைப்படம் வெற்றிகரமாக இன்னும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மிகப்பெரிய வெற்றிக்கு இயக்குனர் முத்தையாவிற்கு எந்த அளவிற்கு பங்கு உள்ளதோ அதே அளவிலான பங்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுக்கும் உள்ளது.
 

26

பொதுவாக கார்த்தி  - யுவன் கூட்டணி என்றாலே சூப்பர் ஹிட், என சொல்லும் அளவுக்கு இதுவரை இவர்கள் இணைந்து பணியாற்றிய திரைப்படங்களான பருத்திவீரன், நான் மகான் அல்ல, பையா ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. அதே போல் இவர்கள் இருவரும் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றியுள்ள விருமன் படத்தின் பாடல்கள் அனைத்துக்கும் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மேலும் செய்திகள்: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்... சிங்கிள் ப்ளீட் சேலை கட்டி அழகு தேவதையாக மாறிய சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன்!
 

36

குறிப்பாக அதில் இடம்பெற்ற கஞ்சா பூ கண்ணால மற்றும் மதுர வீரன் ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகின்றன. இதனிடையே இதில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணால பாடலை விமர்சித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முதல் பலர் தொடர்ந்து விமர்சித்து வந்ததையும் பார்க்க முடிந்தது. 
 

46

இந்த நிலையில், 'கஞ்சா பூ கண்ணால' பாடல் வரிகளுக்காக தான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதாக இந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் மணிமாறன் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: சல்மான் கான் பெண்களை அடித்து கொடுமை படுத்துபவர்..! முன்னாள் காதலியின் பகீர் குற்றச்சாட்டு!
 

56

இதுகுறித்து பிரபல தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டியில் அவர் கூறும்போது, மயக்கும் தன்மைக்காக பெண்ணின் கண்களை கஞ்சா பூவுடன் ஒப்பிட்டதாகவும், கஞ்சாவுடன் ஒப்பிடவில்லை என்று அவர் தெரிவித்தார்.
 

66

மேலும், பாடலின் வரிகள் கற்பனைக்காக உவமைப்படுத்தப்பட்டது என்று கூறிய அவர், தான் எழுதியது தவறான வார்த்தைதான் என்றும் கூறினார். இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: ஹீரோயினாக அறிமுகமாகிறாரா..? நடிகை ரோஜாவின் மகள்..! சீக்ரட்டாக நடக்கும் வேலைகள்!
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved