MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தாணடி" குட் நியூஸ் சொன்ன சினேகன் கன்னிகா ஜோடி!

"நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றாவது இன்னொரு உயிர் தாணடி" குட் நியூஸ் சொன்ன சினேகன் கன்னிகா ஜோடி!

Lyricist Snehan : பிரபல பாடலாசிரியர் மற்றும் நடிகர் சினேகன், ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை இப்பொது வெளியிட்டுள்ளார்.

2 Min read
Ansgar R
Published : Sep 30 2024, 09:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Snehan

Snehan

தஞ்சாவூரில் ஏழ்மையான குடும்பத்தில் 8வது மகனாக பிறந்தவர் தான் சினேகன். சினிமா மீது கொண்ட ஆசையின் காரணமாக சென்னை வந்து, பல ஆண்டுகள் பிரபல பாடலாசிரியர் வைரமுத்துவின் வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன் பிறகு ஒரு மாத இதழில் கவிதை தொகுப்புகள் மற்றும் கதைகளை எழுத துவங்கிய சினேகனை படங்களுக்கு பாடல்கள் எழுதுமாறு ஊக்கப்படுத்தியது மறைந்த இயக்குனர் சிகரம் பாலசந்தர் தான்.

எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் உருவான புத்தம் புது பூவே என்ற படத்தில் தான் முதல் முதலாக பாடலாசிரியராக அறிமுகமானார் சினேகன். ஆனால் அந்த படம் இறுதி வரை வெளியாகாமல் போனது, அவருக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு சுமார் 3 ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு கடந்த 2000மவது ஆண்டு வெளியான "மனு நீதி" என்ற திரைப்படத்தின் மூலம், தேவா இசையில் தான் பாடலாசிரியராக அறிமுகனார் சினேகன்.

அஜித்தின் குட் பேட் அக்லி.. படத்தில் இணையும் லோக்கியின் நண்பன் - வேற லெவல் சம்பவம் வெயிட்டிங்!

24
KamalHaasan

KamalHaasan

அன்று துவங்கி இன்று வரை இந்த 24 ஆண்டு கால திரை பயணத்தில் சுமார் 500 படங்களில் 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார் சினேகன். "தோழா தோழா", "கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா", "ஆராரிராரோ", "யாத்தே யாத்தே", "சொந்தமுள்ள வாழ்கை" என்று தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் பாடல்களை எழுதியது சினேகன் தான். தோழா தோழா பாடலை எழுதியபோது தனக்கு கிடைக்காத வரவேற்பு, கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா பாட்டிற்கு கிடைத்தது என்று நகைப்புடன் பல முறை கூறியுள்ளார் சினேகன்.             

கடந்த 2018ம் ஆண்டு 21 பிப்ரவரி அன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் துவங்கியபோது, அக்கட்சியின் முதல் செயற்குழு உறுப்பினராக இணைந்தவர் சினேகன். மேலும் கடந்த 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அக்கட்சி சார்பாக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு 5ம் இடம் பிடித்தார் அவர். கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 29ம் தேதி பிரபல சின்னத்திரை நடிகை கன்னிகா ரவியை அவர் திருமணம் செய்துகொண்டார். 

34
Lyricist Snehan

Lyricist Snehan

சன் டிவியில் மிகவும் பிரபலமான  ஓடி வந்த "நாதஸ்வரம்" என்ற நாடகத்தில் ஹீரோயினாக நடித்து வந்தவர் கன்னிகா. சின்னத்திரை மூலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற அவர் கடந்த 2021ம் ஆண்டு சினேகனை திருமணம் செய்துகொண்டார். தனது சமூக ஊடக கணக்குகளில் மிகவும் பிசியாக உள்ள கன்னிகா, தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் சிறப்பான தருணம் குறித்த ஒரு சிறந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அவர்.

44
Actress Kannika

Actress Kannika

தங்களுடைய திருமணமதில் பங்கேற்ற நடிகர் கமல்ஹாசன், "நாம் வாழ்ந்த வாழ்விற்கு சான்றவிட்டது இன்னொரு உயிர் தான்" என்று கூறி சினேகா மற்றும் கன்னிகாவை வாழ்த்தியதை நினைவுகூர்ந்து தான் கர்பமாக இருப்பதாய் அறிவித்துள்ளார். அவருடைய ரசிகர்களும், திரை பிரபலங்களும் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மனைவியின் ஆசை; 175 ஏக்கர் நிலத்தால் ஜெயிலுக்கு போய்.. கேரியரையே இழந்த சுமன்.!

About the Author

AR
Ansgar R
கமல்ஹாசன்
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved