வாயை விட்டு சிக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்... முதலுக்கே மோசம் வந்துடுச்சி... அடுத்த ஆப்பு வைக்க தயாரான வனிதா!
வனிதா விஷயத்தில் வாயை விட்டு, தற்போது பெரிய சிக்கலில் சிக்கி உள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். இனி அவர் சட்டம் படிக்காமல், நீதிபதி மாதிரி அடுத்த வீடு பிரச்சனைக்கு தீர்ப்பு வழங்க கூடாது என, வழக்கு தொடர உள்ளதாகவும் வனிதா செம்ம ஷாக் கொடுத்துள்ளார். இதில் இன்னும் பல பிரச்சனைகள் இருக்கு வாங்க பார்க்கலாம்...
வனிதா - பீட்டர் பால் மூன்றாவது திருமணத்திற்கு கருத்து சொல்லி வசமாக வாயை விட்டு சிக்கியவர் தான், லட்சுமி ராமகிருஷ்ணன்.
அதாவது, அவர் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளவர். இன்னும் விவாகரத்து செய்யவில்லை. அப்படியிருக்கும்போது படிப்பு, புகழ் மற்றும் தைரியமுள்ள ஒரு பெண் எப்படி இந்த தவறை செய்திருப்பார் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என தெரிவித்திருந்தார். மேலும் இந்த திருமணம் முடியும் வரை முதல் மனைவி ஏன் அமைதியாக இருந்தார். திருமணத்தை ஏன் தடுத்து நிறுத்தவில்லை” என கேள்வி எழுப்பியிருந்தார்.
லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவை பார்த்த வனிதா, நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை. எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எவ்வித கருத்தையும் நீங்கள் சொல்ல வேண்டாம் என கடுப்பாக பதிலளித்துள்ளார்.
இதையடுத்து தனது ட்வீட்டை நீக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டார் என்பது அனைவரும் அறிந்தது தான் .
பின்னர், வனிதா திருமணம் செய்துள்ள பீட்டர் பால் மனைவிக்கு ஆதரவாக, டிவி நிகழ்ச்சியை போலவே, போன் மூலம் எலிசபெத் ஹெலன் வாழ்க்கை, திருமணம், பிள்ளைகள், தற்போதைய நிலை.... வனிதா பீட்டர் பால் வாழ்க்கையில் வந்தது எப்படி என பல்வேறு விஷயங்களை கேட்டு அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த பேட்டி பார்த்து கடுப்பான வனிதா, ஆன்லைன் பேட்டி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் பேச வாய்ப்பு கிடைத்ததும் அவரை தாறு மாறாக விமர்சித்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல்... வாடி... போடி... என சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்கினார்.இந்த பேட்டி பார்த்து கடுப்பான வனிதா, ஆன்லைன் பேட்டி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் பேச வாய்ப்பு கிடைத்ததும் அவரை தாறு மாறாக விமர்சித்தார். லட்சுமி ராமகிருஷ்ணன் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல்... வாடி... போடி... என சகட்டு மேனிக்கு வெளுத்து வாங்கினார்.
இவரை மட்டும் இன்றி இவருடைய கணவரையும் இந்த பிரச்சனைக்குள் கொண்டு வந்து, உன்னை கிழிக்க தான் வந்தேன் என இருவரும் ஒரு கட்டத்தில் மாறி மாறி திட்டிக்கொண்டது குழாய்யடி சண்டையை மிஞ்சியது.
இந்த பிரச்சனை முடிந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், தற்போது இந்த பிரச்சனை சம்மந்தமாக லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவுக்கு வக்கீல் நோட்டிஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணன் அனுப்பிய வக்கீல் நோட்டீஸில், 1 .25 கோடி பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்து, வனிதா அவர் அனுப்பிய அந்த நோட்டீஸ் காப்பி ஒன்றையும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். நல்ல மனசு உள்ள சமூக ஆர்வலர் 1 . 25 கோடி கேட்பதை சட்ட ரீதியாக சந்திப்பேன் என அவருக்கு தடாலடி பதில் கொடுத்தார்.
லட்சுமி ராமகிருஷ்னன் இப்படி செய்வார் என சற்றும் எதிர்பார்க்காத சிலர், வனிதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்பது போல் கருத்து சொல்லி வந்தனர்.
இதை பிடித்துக்கொண்ட வனிதா இனி, அவரை சும்மா விட மாட்டேன் பஞ்சாயத்து நிகழ்ச்சியில் இனி அவர் பங்கேற்க கூடாது என ஆவேசமாக கூறி, லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த நிகழ்ச்சிக்கும் ஆப்பு வைக்க துணித்து விட்டார்.
ஏற்கனவே லட்சுமி ராமகிருஷ்னன் நடத்தி வந்த சொல்வதெல்லாம் நிகழ்ச்சியும் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், நிறுத்தப்பட்ட நிலையில் அதே நிலை தற்போது நடத்தி வரும் நிகழ்ச்சிக்கும் வந்துள்ளது. இதை எப்படி லட்சுமி ராமகிருஷ்ணன் சமாளிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.