யம்மாடியோ... ரூ.3000 கோடியா..! அதகளமான அறிவிப்பை வெளியிட்ட கேஜிஎப் பட நிறுவனம்
புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தங்களது எதிர்கால திட்டம் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளது.
யாஷ் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்த கே.ஜி.எஃப் மற்றும் கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்களின் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கன்னட திரையுலகம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த நிறுவனம் தான் ஹோம்பாலே பிலிம்ஸ். மேற்கண்ட இந்த இரண்டு படங்கள் மட்டும் கிட்டத்தட்ட ரூ.2000 கோடி வசூலை அள்ளி சாதனை படைத்துள்ளன.
இதுதவிர அந்நிறுவனம் தயாரிப்பில் கடந்தாண்டு வெளியான ரிஷப் ஷெட்டியின் காந்தாரா திரைப்படம் கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.400 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்தது. 2022-ல் மட்டும் அந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த கே.ஜி.எஃப் 2 மற்றும் காந்தாரா ஆகிய இரண்டு படங்களும் பான் இந்தியா அளவில் பிரம்மாண்ட வெற்றிப்படங்களாக அமைந்தன.
இதையும் படியுங்கள்... ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை ‘தளபதி 67’க்கு லோகேஷ் போட்ட பக்கா பிளான்... எப்புட்ரா என விஜய்யே வியந்துட்டாராம்
இதனால் புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தங்களது எதிர்கால திட்டம் குறித்தும் அதில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.3000 கோடியை முதலீடு செய்து பிரம்மாண்ட படங்களை எடுக்க உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்நிறுவனத்தின் கைவசம் டஜன் கணக்கில் படங்கள் உள்ளதாம். குறிப்பாக பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தை தயாரித்து வருகின்றனர்.
மேலும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் ரகு தாத்தா என்கிற படத்தை தற்போது தயாரித்து வருகின்றனர். இப்படத்தை புதுமுக இயக்குனர் சுமன் குமார் இயக்குகிறார். இதுதவிர இறுதிச்சுற்று, சூரரைப் போற்று என வரிசையாக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துவரும் சுதா கொங்கராவும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அஜித் பேசிய கெட்ட வார்த்தைகளுக்கு பீப் போட்ட சென்சார் போர்டு... வெளியானது துணிவு பட சென்சார் சான்றிதழ்