MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Karthigai Deepam: பாராட்டு மழையில் கார்த்திக்! பயத்தில் பதறும் அபிராமி.! என்ன ஆச்சு? கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: பாராட்டு மழையில் கார்த்திக்! பயத்தில் பதறும் அபிராமி.! என்ன ஆச்சு? கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபாவும் அபிராமியும் கோவிலுக்கு சென்றிருந்த போது அங்கு தீபாவை பார்க்க கூடிய கூட்டத்தில் சிக்கி அபிராமி கீழே விழுந்து காயம் ஏற்பட அவள் தீபா மீது கோபத்தை காட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  

2 Min read
manimegalai a
Published : Feb 21 2024, 04:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

அதாவது அபிராமியும் தீபாவும் வீட்டிற்கு வர கையில் காயத்துடன் இருக்க அருணாச்சலம் என்னாச்சு என்று கேட்க நடந்த விஷயத்தை சொல்கிறாள். பிறகு ரூமுக்கு வந்து கார்த்திக் போட்டோவை எடுத்து பார்த்து கொண்டிருக்க அந்த போட்டோ கீழே விழுந்து உடைய அபிராமி ஜோசியர் சொன்னதையெல்லாம் நினைத்து பார்த்து பயப்படுகிறாள். அடுத்து கார்த்திக் ஆபிஸ் வர அங்கு எல்லாரும் கை தட்டி வாழ்த்து சொல்கின்றனர். இதனையடுத்து கார்த்தியும் நீங்கள் செய்ததும் பெரிய உதவி என்று பாராட்டி நன்றி தெரிவிக்கிறான். 

24

பிறகு சினேகாவை பார்த்து என்ன சினேகா கச்சேரிக்கு நீங்க வரவே இல்லை என்று கேட்க இல்ல சார் கொஞ்சம் பெர்சனல் வேலை இருந்ததாக சொல்ல கார்த்திக் மேலேயும் கீழேயும் பார்க்க சினேகா உண்மையாகவே கொஞ்சம் வேலை இருந்தது சார். அதனால் தான் வர முடியல. எனக்கும் கச்சேரிக்கு வரணும் என்ற ஆசை இருந்தது என்று சொல்கிறாள். 

Anirudh : பாலிவுட் திரையுகை இசையால் அசர வைத்த அனிருத்! முதல் இந்தி படத்திற்கே கிடைத்த மிக உயரிய விருது!

34

அடுத்து இளையராஜா கார்த்திக்கிடம் தீபா பாட கூடாதுனு எவ்வளவு தடை எவ்வளவு எதிரிகள் என்று பேச வீட்லயே ஐஸ்வர்யா அண்ணி எல்லாம் இருக்காங்க என்று சொல்கிறான். பிறகு கார்த்திக் வீட்டிற்கு வர தீபா சோகமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க கோவிலில் அபிராமி கீழே விழுந்ததையும் தன்னை திட்டிய கதையையும் சொல்கிறாள். கார்த்திக் சரி ப்ரீயா விடுங்க, நான் பார்த்துக்கறேன் என்று பர்ஸ்ட் எயிட் பாக்ஸை எடுத்து கொண்டு அபிராமியை பார்க்க வருகிறான். 

44

இங்கே அபிராமி அருணாச்சலத்திடம் ஜோசியர் சொன்ன விஷயங்களையும் தனக்கும் இருக்கும் பயத்தையும் சொல்ல கார்த்திக் இதை கேட்டு விடுகிறான். பிறகு கார்த்திக் ரூமுக்குள் வர இவர்கள் பேச்சை நிறுத்தி விடுகின்றனர், கார்த்திக் அபிராமிக்கு மருந்து போட்டு சாப்பாடு ஊட்டி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

நடிகைகள் எல்லாம் விபச்சாரிகளா? இந்த விஷயம் தான் எனக்கு ரொம்ப வலிக்குது! த்ரிஷாவுக்கு ஆதரவாக சீரிய கஸ்தூரி!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
தமிழ் சீரியல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved