காசு கொடுத்து என்னை ட்ரோல் செய்கிறார்கள் - நடிகை பூஜா ஹெக்டே ஆதங்கம்
சமூக ஊடகங்களில் தன்னை ட்ரோல் செய்ய பணம் கொடுக்கப்படுகிறது என்கிற தகவலை அறிந்தபோது அதிர்ச்சியடைந்ததாக நடிகை பூஜா ஹெக்டே கூறினார்.
- FB
- TW
- Linkdin
- GNFollow Us

Pooja Hegde Befitting Reply to Trolls : தமிழில் விஜய்க்கு ஜோடியாக ஜனநாயகன், சூர்யா உடன் ரெட்ரோ போன்ற படங்களில் நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தன்னைப் பற்றி வரும் ட்ரோல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். ஃபிலிம்பேருக்கு இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : “ட்ரோல்களைப் பார்க்கும் போது பல நேரங்களில், அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிஆர் விஷயத்தில் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன். மீம் பக்கங்கள் என்னை தொடர்ந்து ட்ரோல் செய்த ஒரு காலம் இருந்தது,
அவர்கள் ஏன் என்னைப் பற்றி தொடர்ந்து நெகடிவிட்டி பரப்புகிறார்கள் என்று நான் யோசித்தேன். அதுவும் என்னை சரியாக டார்கெட் செய்து ட்ரோல் செய்வதை நான் உணர்ந்தேன். மற்றவர்களைக் குறைத்து மதிப்பிட ஒரு கும்பல் நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்று பின்னர் எனக்குப் புரிந்தது. அதை நான் அறிந்தபோது, என் பெற்றோரும் நானும் மிகவும் வருத்தப்பட்டோம்.
Pooja Hegde
ஆனால் நான் அதை ஒரு பெருமையாக எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் யாராவது உங்களை குறைத்து மதிப்பிட விரும்பினால், நீங்கள் அவர்களை விட உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒன்றும் பிரச்சனை இல்லை என்று நான் என் பெற்றோரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு, அது அதிகமாக இருந்தது. என்னை ட்ரோல் செய்ய சிலர் லட்சக்கணக்கில் செலவிடுகிறார்கள் என்று நான் கண்டுபிடித்தேன்" என்று பூஜா கூறினார்.
இதையும் படியுங்கள்... மாப்பிள்ளை மோடில் சூர்யா - பூஜா ஹெக்டேவுடன் குத்தாட்டத்தில் தெறிக்கவிடும் 'கனிமா' பாடல் வெளியானது!
Pooja Hegde about Trolls
தொடர்ந்து பேசிய அவர் "பின்னர் என்னை ட்ரோல் செய்யும் மீம் பக்கங்களைத் தொடர்பு கொண்டு பிரச்சனை என்னவென்று அவர்களிடம் கேட்கும்படி என் குழுவிடம் சொன்னேன். அவர்கள் சொன்ன பதில் நேரடியாக இருந்தது. உங்களை ட்ரோல் செய்ய எங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். இனி இதை நிறுத்தவோ, அல்லது அந்த அணியை திருப்பி ட்ரோல் செய்யவோ நீங்க எவ்வளவு தருவீர்கள் என கேட்கிறார்கள். அது மிகவும் விசித்திரமாக இருந்தது.
ஆனால் என்னை ஏன் ட்ரோல் செய்கிறார்கள் அல்லது அதற்குப் பின்னால் என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. சில நேரங்களில் என் பதிவின் கீழ் எனக்கு எதிராக ஒரு பெரிய கருத்தைக் காணும்போது, நான் சுயவிவரத்திற்குச் செல்லும்போது அவர்கள் ஐடியில் டிபியோ அல்லது எந்த பதிவுகளும் இருக்காது. இவை வெறும் பணம் செலுத்திய Botகள்." என்று பூஜா கூறினார்.
Actress Pooja Hegde
பூஜா கடைசியாக ஷாஹித் கபூருடன் தேவா என்ற படத்தில் நடித்தார். விமர்சகர்களிடமிருந்து மோசமான விமர்சனங்களைப் பெற்றது, அதனால் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறவில்லை. அடுத்து வருண் தவானுடன் ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹே என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதுதவிர ரஜினிகாந்த் - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ஒரு நடன காட்சியிலும் பூஜா ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இதுவரை எந்த தமிழ் படத்துக்கு செய்யாததை ‘ரெட்ரோ’ படத்துக்காக செய்த பூஜா ஹெக்டே!