MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அரவிந்த்சாமியின் ரெண்டகம்... படத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்

அரவிந்த்சாமியின் ரெண்டகம்... படத்திற்கு தடை விதித்த உயர்நீதிமன்றம்

தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேர் தலா 10 லட்சம் ரூபாயை வரும் பத்தாம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

2 Min read
Kanmani P
Published : Oct 07 2022, 02:25 PM IST| Updated : Oct 07 2022, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

90களில் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற சாக்லேட் பாய் என்றால் அவர் அரவிந்த்சாமி தான் இளம் பெண்களை தன் நடிப்பால் ஈர்த்து வைத்திருந்த இவர், பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தளபதி படம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அரவிந்த்சாமி, பின்னர் ரோஜா படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த முன்னணி நடிகராக மாறிவிட்டார். தொடர்ந்து பாம்பே, தாலாட்டு, டூயட் , மின்சார கனவு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

25

தமிழ், ஹிந்தி, மலையாளம் என பன்மொழி படங்களில் நடித்து வந்த இவர் 2006 ஆம் ஆண்டு சாசனம் என்னும் படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இதன் பின்னர் அரவிந்த் சாமியை  திரையில் காண இயலவில்லை. பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு கார்த்தியின் மகன் கௌதம் கார்த்திக் அறிமுகமான கடல் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரை உலகத்திற்கு என்ட்ரி கொடுத்தார். இதை தொடர்ந்து தனி ஒருவன், அன்புள்ள அப்பா, துருவா, போகன், செக்கச் சிவந்த வானம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் அரவிந்த் சுவாமி.

மேலும் செய்திகளுக்கு...என்னது....விஜய்யின் தளபதி 67 ஹாலிவுட் ரீமேக்கா? தீயாய் பரவும் தகவல் இதோ

35

இரண்டு நாயகர்களில் ஒருவராக நடித்து வந்த இவர் தற்போதெல்லாம் வில்லன் ரோலுக்கு பக்காவாக பொருந்தி உள்ளார். தற்போது இவர் நடிப்பில் நரகாசுரன்,  கள்ளபார்ட்,  சதுரங்க வேட்டை, வணங்காமுடி உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ரெண்டகம் படத்திற்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட கூடாது என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...பொன்னியின் செல்வன் பார்த்ததும் திரிஷாவுக்கும், ஜெயம் ரவிக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட் அனுப்பிய சூர்யா - ஜோதிகா

45
Arvind Swamy

Arvind Swamy

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் வெளியாகி உள்ள இந்த படத்தின் காதை தன்னுடையது என சென்னையை சேர்ந்த கிஷோர் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த படத்தின் கதையை ஜாவா என்கிற பெயரில் அரவிந்த் சாமியிடம் தெரிவித்ததாகவும், அதற்கான காப்புரிமை கூட தன்னிடம் உள்ளதாகவும், தனக்குத் தெரியாமல் தமிழில் ரெண்டகம் என்ற பெயரில் அதே கதையை படமாக்கி உள்ளதாகவும், இந்த படத்தை ஓடிடியில் வெளியிடக்கூடாது எனவும் அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

55
rendagam

rendagam

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி சரவணன் ரெண்டகம் படத்தை இந்தியாவில் ஓடிடி தளத்தில் வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு, தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐந்து பேர் தலா 10 லட்சம் ரூபாயை வரும் பத்தாம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved