நடிகை ஹன்சிகாவுக்கு தொழிலதிபருடன் திருமணமா? யார் அவர்... உண்மையை உடைத்த நடிகை!
பிரபல நடிகை ஹன்சிகா மோட்வானிக்கு தொழிலதிபருடன் திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல், சமூக வலைத்தளத்தில் சுற்றி வந்த நிலையில், இதுகுறித்த உண்மை தகவலை வெளியிட்டுள்ளார்.
பொதுவாகவே, திரைபிரபலங்களின் காதல், உறவு போன்ற தனிப்பட்ட விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வதில், ரசிகர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் தற்போது திருமண வயதை எட்டியுள்ள நடிகை ஹன்சிகா மோட்வானியின் திருமணம் குறித்தும் அவ்வப்போது சில வதந்திகள் வெளியான வண்ணம் உள்ளது.
அந்த வகையில் இவர் விரைவில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக காட்டு தீ போல் ஒரு செய்தி பரவியது.
ஹன்சிகா மோட்வானியின் கணவராக வர இருப்பவர் யார்? என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் எழுப்ப துவங்கினர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை ஹன்சிகா... தான் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுபவர் யார் என கேட்டு அதிர வைத்துள்ளார். இதில் இருந்து இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.
நடிகை ஹன்சிகா மோத்வானி முன்னதாக, நடிகர் சிம்புவை காதலித்தார். இருவரும், வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் இணைந்தும் நடித்தனர். பின்னர் தங்களுடைய காதலை வெளிப்படையாக கூறி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்த நிலையில், திடீர் என பிரேக் அப் என கூறி அதிர்ச்சி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுடைய பிரிவு குறித்து பின் தெரிவித்த சிம்புவின் தந்தை, திருமணத்திற்கு பின் நடிக்க கூடாது என சிம்பு கூறியதாகவும், இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்ததாகவும் தெரிவித்தார்.
இருவரும் காதலித்து பிரிந்த பின்னர், தற்போது மீண்டும் 'மஹா' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். எனினும் தற்போது நல்ல நண்பர்களாக மட்டுமே ஷூட்டிங் ஸ்பாட்டில் பழகி வருவதாக கூறப்பட்டது.
காதல் ஒத்து வராததால், பெற்றோர் பார்த்து வைக்கும் நபரை திருமணம் செய்து கொள்ளும் யோசனையில் நடிகை ஹன்சிகா உள்ளாராம். அதனால் தான் இது போன்ற வதந்திகள் பரவி வருகிறது.