ஒரே நேரத்தில் இரண்டு காஜல் அகர்வால்..! கணவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..! வைரலாகும் புகைப்படம்..!
ஹனிமூன் முடிந்து மீண்டும், ஷூட்டிங் பணிகளில் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் தற்போது கணவருடன் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் 30ம் தேதி பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கெளதம் கிட்சிலுவுக்கும் மும்பையில் திருமணம் நடைபெற்றது.
அதன் பின்னர் காதல் கணவருடன் மும்பையில் உள்ள புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
மேலும் காதல் கணவருடன் மாலத்தீவிற்கு தேனிலவு சென்ற காஜல் அகர்வால் அங்கிருந்தும் கிக்கான உடையில் பல கிளிக்குகளை பதிவேற்றி வந்தார்.
கணவருடன் செம்ம கிளாமர் உடையில் ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள், மற்றும் நீருக்கு அடியில் ஸ்கூபா டைவிவ் செய்தது என, பல ரகரகமான புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்சை செம்ம காண்டாகினார்.
திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க உள்ளதால் என்னவோ ஹனிமூனையும் கூட ஒரு போட்டோ ஷூட் போலவே மாற்றிவிட்டார் காஜல்.
கிட்ட தட்ட இரண்டு வாரத்திற்கும் மேல், ஹனி மூனை என்ஜாய் செய்த காஜல், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் புசியாகியுள்ளார்.
சிரஞ்சீவியின் ’ஆச்சாரியா’ படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்துகொண்டார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு கணவருடன் காஜல் அகர்வால் வந்தபோது சிரஞ்சீவி உள்பட ’ஆச்சாரியா’ படக்குழுவினர் கெளதம்-காஜல் அகர்வால் தம்பதிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிலையில் தற்போது காஜலின் கணவர் கெளதம், சிங்கப்பூரில் இருக்கும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் காஜல் அகர்வாலின் மெழுகு சிலை பார்க்க சமீபத்தில் காஜல் தனது கணவருடன் சென்றுள்ளார்.
அங்கு ஒரு பக்கம் காஜல் அகர்வாலும், இன்னொரு பக்கம் காஜல் மெழுகுச் சிலையுடன் சேர்ந்து, ஒரே சமயத்தில் இரண்டு காஜலுடன் போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.