MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதலில் வித்யாசாகருக்கு ‘நோ’ சொல்லி ரிஜெக்ட் பண்ணிய மீனா... பின் திருமணம் செய்துகொண்டது எப்படி?

முதலில் வித்யாசாகருக்கு ‘நோ’ சொல்லி ரிஜெக்ட் பண்ணிய மீனா... பின் திருமணம் செய்துகொண்டது எப்படி?

திருமணத்துக்கு முதலில் நோ சொல்லி பின்னர் சம்மதித்தது குறித்து நடிகை மீனா, குஷ்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார். 

2 Min read
Ganesh A
Published : Jun 29 2022, 03:20 PM IST| Updated : Jul 02 2022, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கணவரை இழந்து வாடும் நடிகை மீனாவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டார் முதல் சுப்ரீம் ஸ்டார் வரை... மீனாவின் கணவர் வித்யாசாகர் உடலுக்கு பிரபலங்கள் கண்ணீர்மல்க அஞ்சலி

25

திருமணத்துக்கு முதலில் நோ சொல்லி பின்னர் சம்மதித்தது குறித்து நடிகை மீனா, குஷ்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ளார். அந்த நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது. அதில் நடிகை மீனா கூறியதாவது : எனக்கும் சாகருக்கும் 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் கல்யாணம் நடந்தது. முதலில் அவரிடம் பேச எனக்கு சவுகரியமாக இல்லை.

இதையும் படியுங்கள்... வித்யாசாகர் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் சென்ற ரஜினி.. அங்கிள் என கதறி அழுத மீனா- கலங்கிப்போன சூப்பர்ஸ்டார்

35

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மே மாத வாக்கில் பேசத்தொடங்கினோம். பின்னர் ஜாதகம் பார்த்தபோது, இவர் ஓகே தான் ஆனால் இதைவிட நல்ல வரன் வருமே என ஜோசியர் சொல்லிவிட்டார். அவர் அப்படி சொன்னதும் எனக்கும் சந்தோஷம் தாங்கல, உடனே அவர் வேண்டாம் என்றேன். அவரிடமே சென்று குட் பை சொன்னேன். அவரும் எனக்கு வாழ்த்து சொல்லிட்டு பை-னு சொல்லிட்டாரு.

இதையும் படியுங்கள்... நடிகை மீனாவின் கணவர் எப்படி இறந்தார் தெரியுமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய பரபரப்பு தகவல்

45

அதன்பின்னர் எனது அத்தை வந்து, ஜோசியர் சொன்னால் உடனே வேண்டாம் என்று சொல்லிவிடுவதா என சத்தம் போட்டார். அதன்பிறகு மீண்டும் சாகர் குடும்பத்துடன் பேசி எங்களது திருமணம் நடந்தது. எங்களுக்குள் சண்டை வந்தால் முதலில் வந்து பேசுவது சாகர் தான்” என சுவாரஸ்ய தகவலை மீனா அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

55

திருமணத்திற்கு பின்னரும் நடிகை மீனா சினிமாவில் சக்சஸ்புல் நடிகையாக வலம் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தது சாகர் தான். அன்பான கணவர், அழகான குழந்தை என சந்தோஷமாக வாழ்ந்து வந்த மீனாவிற்கு சாகரின் மரணம் பேரிழப்பாகவே உள்ளது. 

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved