சிறையில் துடிதுடித்த இளம் நடிகை... மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி...!
போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபல கன்னட நடிகை கடும் முதுகு வலி காரணமாக சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
கன்னட திரையுலகையே பரபரப்பாக்கிய போதைப்பொருள் விவகாரத்தில் இளம் நடிகைகளான ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரது ஜாமீன் மனுவையும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இருவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டனர்.
ஒரு அறையில் அடைக்கப்பட்ட இரு நடிகைகளும் முடியை பிடித்து அடித்துக்கொள்ளாத கொடுமையாக சண்டைப் போடுவதாகவும், இவர்களை எப்படி சமாளிப்பது என தெரியாமல் சிறைக் காவலர்கள் விழி பிதுங்குவதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இருவரையும் வேறு வேறு அறைக்கு மாற்றிய சிறைக்காவலர்கள். ராகினி திவேதியை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணின் அறைக்கும், சஞ்சனாவை கிரிக்கெட் சூதாட்டத்தில் கைதான பெண்ணின் அறைக்கும் மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராகினி திவேதி தனக்கு கடுமையான முதுவலி இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த சிறப்பு நீதிமன்றம் சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற உத்தரவிட்டது.
முதலில் சிகிச்சைக்கு முரண்டு பிடித்த ராகினி சில் நாட்களுக்கு முன்பு கடும் முதுகுவலியால் அவதிபட்டதாகவும், சிறை அதிகாரிகள் மூலமாக தன்னை சிறையில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கோரியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ராகினி தற்போது பர்ப்பன அக்ரஹாரா சிறையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.