தனுஷுன் 37 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த பகிர்ந்த புகைப்படம்!
இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நேற்றிரவு, தன்னுடைய குடும்பத்தினரோடு மிகவும் எளிமையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார் தனுஷ். இது குறித்த புகைப்படம் ஒன்றையும், தனுஷின் மனைவி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் தனுஷின் 37 வது பிறந்த நாளை முன்னிட்டு, தனுஷ் ரசிகர்கள் அதனை கொண்டாட பல திட்டங்கள் போட்டிருந்தாலும், கொரோனாவின் கோர தாண்டவத்தால் எதையுமே செயல்படுத்த முடியாத நிலை தான் தற்போது உள்ளது.
இந்நிலையில், நடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நேற்றிரவு, தன்னுடைய குடும்பத்தினரோடு மிகவும் எளிமையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார் தனுஷ். இது குறித்த புகைப்படம் ஒன்றையும், தனுஷின் மனைவி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் தனுஷின் பிறந்தநாளுக்கு அவருடைய ரசிகர்கள் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை சோசியல் மீடியா மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியாவிலிருக்கும் அனைத்து இயக்குநர்களும், நடிகர்களும் தனுஷுடன் பழக வேண்டும். அவரை வைத்துப் படம் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த அளவுக்கு தன் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.
எந்தக் கதாபாத்திரத்திலும் நடிக்கக்கூடிய திறமையைக் கொண்ட நடிகர் என்றும் பெயர் எடுத்துவிட்டார். இவரின் தேடுதலும், நடிப்பு மீது இவருக்கு உள்ள ஆர்வமுமே, இவரை பாலிவுட் திரையுலகை தாண்டி ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க செய்து விருதுகளையும் பெற வைத்துள்ளது.
2002ம் ஆண்டு தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ‘துள்ளுவதோ இளமை’மூலம் அறிமுகமான தனுஷ் துவக்கத்தில் ‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா?’என்று விமர்சிக்கப்பட்டவர் தனுஷ்.
ஆனால் அடுத்து அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘காதல் கொண்டேன்’படத்தில் அனைவரையும் அண்ணாந்து பார்க்கவைத்தார். வெற்றிமாறனின் ’ஆடுகளம்’படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார். பாடலாசிரியர்,பாடகர், இயக்குநர்,தயாரிப்பாளர் என்று பல அவதாரங்கள் எடுத்து அசுர வளர்ச்சியில் வளர்த்துக்கொண்டுள்ளார்.