பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களுக்கு ஒருநாளைக்கு இத்தனை லட்சம் சம்பளமா?
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருநாளைக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பது குறித்து சுவாரஸ்யமான தகவல் கசிந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது தான் களைகட்ட ஆரம்பித்திருக்கிறது. மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை, சச்சரவுகள் ஆரம்பித்துவிட்டன.
ஏற்கனவே பலதரப்பட்ட தளங்களில் இருந்தும் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நிலையில், இவர்களையும் எல்லாம் கொஞ்சம் உசுப்பேற்றுவதற்காக விஜே அர்ச்சனா வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்து நிறைய போட்டிகள், சண்டைகள் என பிக்பாஸ் வீடே பரபரப்பாக இருக்கிற
இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருநாளைக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பது குறித்து சுவாரஸ்யமான தகவல் கசிந்துள்ளது.
அதாவது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான, ஸ்டார் வேல்யூ அதிகம் கொண்ட பிரபலங்களான ரம்யா பாண்டியன், ஆரி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ஷிவானி, ரியோ ராஜ் ஆகியோருக்கு ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
அடுத்து மாடல்கள் சனம் ஷெட்டி, சம்யுக்தா கார்த்திக், பாலாஜி முருகதாஸ், பாடகர் வேல்முருகன், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோருக்கு ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இறுதியாக செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், கேப்ரில்லா, சோம சேகர், ஆஜித் ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊதியமாக கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் வீட்டிற்குள் அவர்கள் எத்தனை நாட்களுக்கு தாக்குப்பிடிக்கிறார்களோ? அத்தனை நாளுக்கான சம்பளம் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது.