அடடே அனிதா சம்பத்... சன் டி.வி. செய்திவாசிப்பாளரை தட்டித்தூக்கிய பிக்பாஸ்...!
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் 5வது போட்டியாளராக களமிறங்கியுள்ளார்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 3சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 4ஆம் சீசன் தொடங்கியுள்ளது. சமூக வலைத்தளங்களிலும் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
முதல் போட்டியாளராக ரியோ ராஜ் மற்றும் இரண்டாம் போட்டியாளராக மாடல் சனம் ஷெட்டி வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் 3ஆம் போட்டியாளராக கமலுடன் “புன்னகை மன்னன்” படத்தில் நடித்திருந்த நடிகை ரேகா போட்டியாளராக களமிறங்கியுள்ளனர்.
sanam
4வது போட்டியாளராக மாடல் பாலா என்பவர் வீட்டிற்குள் சென்றுள்ளார். இவர் ஆண் அழகு போட்டி போல பல பிட்னஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற போதும் மீடியாவில் இவரைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லையாம். அதனால் சேனல்களின் கவனத்திற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் 5வது போட்டியாளராக களமிறங்கியுள்ளார் அனிதா சம்பத்.
சன் டி.வி.யின் இளம் செய்திவாசிப்பாளராக மட்டுமில்லாமல், சோசியல் மீடியா பிரபலமாகவும் வலம் வருபவர் அனிதா சம்பத். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது ரசிகர்களை மேலும் குஷியாக்கியுள்ளது.