- Home
- Cinema
- 13 வருடங்களு பின் தமிழில் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி ! ஹீரோவான கணேஷ் வெங்கட்ராம்!
13 வருடங்களு பின் தமிழில் ஹீரோயினாக ரீ-என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நாயகி ! ஹீரோவான கணேஷ் வெங்கட்ராம்!
வாரிசு படத்தில் வில்லனாக நடித்திருந்த கணேஷ் வெங்கட் ராம், இந்த படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, அஜித் பட ஹீரோயினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Ganesh Venkatraman
இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை பாவனா தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். திரில்லர் மற்றும் ஹாரர் சப்ஜெட் படமான இதில், வாரிசு திரைப்பட புகழ் கணேஷ் வெங்கட்ராம் நாயகனாக நடிக்கிறார்.
இவர் நடிகை த்ரிஷாவுக்கு ஜோடியாக 'அபியும் நானும்' படம் மூலம் அறிமுகமாகி, உலகநாயகன் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், பிக்பாஸ் நிகழ்ச்சி போன்றவற்றால் ஒட்டு மொத மக்கள் மனங்களை வென்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராம்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' படத்தில் கூட கணேஷ் வெங்கட் ரேம் வில்லனாக நடித்திருந்தார். தமிழில் முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கும் அவரது பாத்திரம் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் நடிகை பாவனா நடிக்கும் திரில்லர் ஹாரர் திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார், நடிகர் கணேஷ் வெங்கட்ராம். நடிகை பாவனா தமிழில் கடைசியாக அஜித்துக்கு ஜோடியாக 'அசல்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குதித்து நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கூறியதாவது… "வாரிசு படத்தின் வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. தெலுங்கு, இந்தி, மலையாளம் சினிமாவில் பலவிதமான கதாப்பாத்திரங்கள் நடித்துள்ளேன். தமிழில் நமக்கு வித்தியாசமான கதாப்பாத்திரம் கிடைப்பதில்லையே என நினைத்திருக்கிறேன். ஆனால் அது வாரிசு மூலம் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சி.
அதிலும் இப்படத்தில் எனது கேரக்டரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் அட்டகாசமாக இருந்ததாக அனைவரும் பாராட்டினார்கள். இது மிகப்பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இப்போது வாரிசை தொடர்ந்து, பல வித்தியாசமான கதபாத்திரங்கள் தமிழில் வர ஆரம்பித்திருக்கிறது. சில படங்களில் முழுக்க என் லுக்கை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன். வாரிசுக்கு பிறகு இப்போது இயக்குநர் ஜெய்தேவ் இயக்கத்தில் ஒரு ஹாரர் திரில்லர் படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் நடிகை பாவனா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் நடிக்கிறார்.
கொடைக்கானல் சென்னை பகுதியில் நடக்கும் கதை. அன்னபெல்லா சேதுபதி படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புது அனுபவமாக இருக்கும். அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான படைப்புகள் எனது நடிப்பில் வரவுள்ளது. விரைவில் அது பற்றிய அறிவிப்புகளும் வரும் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.