“பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த வெண்பா யார் தெரியுமா?.. அவரே சொன்ன பதிலால் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி..!
2017ஆம் ஆண்டு ஃபரீனா, ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
farina
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியலுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. கொரியன் தொடரை டப் செய்து வரும் தொலைக்காட்சிக்கு மத்தியில் “கிருஷ்ணகோலி’’ என்ற வங்காள சீரியலை தழுவி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.
farina
விஜய் டிவி.யில் டாப் ரேட்டிங் கொண்ட இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே எந்த அளவிற்கு பிரபலமோ... அதே அளவிற்கு, வில்லியாக நடித்து வரும் வெண்பாவும் மிகவும் பிரபலம் தான்.
farina
2017ஆம் ஆண்டு ஃபரீனா, ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். தான் 7 மாதம் கர்ப்பமாக இருப்பதை போட்டோவுடன் வெளியிட்ட ஃபரீனாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடனே குழந்தை பிறந்துவிட்டால் ஃபரீனா சீரியலில் நடிக்கமாட்டாரே, அடுத்து யார் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என்ற சந்தேகமும் எழுந்தது.
farina
இதுகுறித்த ரசிகர்களின் கேள்விக்கு ஃபரீனா காணொலி ஒன்றை வெளியிட்டு பதிலளித்துள்ளார். எனக்கு நடிப்பதற்கு ஒரு சிரமமும் இல்லை. முடிந்தவரை நானே தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.