சிம்பிலி வேஸ்ட்... இவங்க ஆமா சாமி... போட்டியாளர்கள் கழுத்தில் போர்டு மாற்றி உண்மையை போட்டுடைத்த அர்ச்சனா!
பிக்பாஸ் வீட்டில் அணைத்து போட்டியாளர்களையும் கடுப்பேற்றி, ஏகப்பட்ட வெறுப்புகளை சம்பாதித்து வைத்துள்ளவர் சுரேஷ். இவர் அனைவரையும் வெறுப்பேற்றும் விதத்தில் நடந்து கொண்டாலும், இவர் மூலம் உள்ளே நல்லவர்கள் போல் நடித்து கொண்டிருக்கும் பலரது முகமூடி கிழிந்து வருகிறது.
இந்நிலையில் இன்றைய முதல் புரோமோவில், பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். இரண்டாவது புரோமோவில் இவர் வந்ததுமே, சுரேஷை வம்புக்கு இழுக்கும் காட்சிகள் தான் இடம்பெற்றன.
இதை தொடர்ந்து வெளியான புரோமோவில், பிக்பாஸ் வீட்டில் உள்ளே 16 போட்டியாளர்கள் எப்படி, என கழுத்தில் போர்டு மாற்றி மனதில் உள்ளதை புட்டு புட்டு வைத்துள்ளார் அர்ச்சனா.
நோ கமெண்ட்ஸ் சிம்பிலி வேஸ்ட் என்கிற பட்டத்தை பாலாவுக்கு தருகிறார்.
சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடிக்கும் நடிகை என்கிற பட்டத்தை ஷிவானிக்கு தருகிறார்.
சவாலான போட்டியாளர் என ரம்யாவிற்கு பட்டம் தருகிறார்.
பிக்பாஸ் சீசன் 4 ட்ரெண்டிங் என்கிற பட்டத்தை அனிதாவிற்கு கொடுத்து, இது பாசிட்டிவ் என நினைக்க வேண்டாம் என்பதையும் கூறுகிறார்.
ஆமா சாமி பட்டம் நிஷாவிற்கு செல்கிறது.
காணவில்லை என்கிற பட்டம் கேபிரிலாவிற்கு செல்கிறது.
நமத்து போன பட்டாசு என்கிற பட்டம் சனம் ஷெட்டிக்கு கொடுக்கிறார்.
மேலும் மற்ற போட்டியாளர்களுக்கு இவர் எப்படி பட்ட போர்டு கொடுப்பர் என்கிற எதிர்பார்ப்பும் எகிறியுள்ளது.
இப்படி எதிர்பாராத பல திரும்புங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிறைந்துள்ளதால் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.