செல்ல மகளுடன் முதல் பொங்கலை கொண்டாடிய ஆல்யா மானசா... இணையத்தை கலக்கும் க்யூட் போட்டோஸ்...!
ஐலா சையத் அழகான பட்டு பாவாடை சட்டையிலும், ஆல்யா பட்டுப்புடவையிலும் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி. சீரியலில் செம்பா என்ற கதாபத்திரத்தில் ஆல்யா மானசாவும் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தனர்.
இந்த சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே ஆலியா மானசா, சஞ்சீவ் ஆகிய இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் எதிர்ப்பு காரணமாக ரகசியமாக திருமணம் நடந்தாலும், 2019ம் ஆண்டு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி தடபுடலாக நடந்தது.
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் ஆல்யா மானசா - சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஐலா சையத் என பெயர் வைத்துள்ளனர்.
குட்டி பாப்பாவாகவே இருந்தாலும் நட்சத்திர தம்பதியின் மகள் என்பதால் ஐலா சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
தற்போது தன்னுடைய செல்ல மகளுடன் முதல் பொங்கலை கொண்டாடிய புகைப்படங்களை ஆல்யா மானசா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஐலா சையத் அழகான பட்டு பாவாடை சட்டையிலும், ஆல்யா பட்டுப்புடவையிலும் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகிறது.