MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • படம் பார்க்க ஆள் இல்லை... துணிவு படத்தின் ஷோ கேன்சல் - தமிழ்நாட்டில் அஜித் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?

படம் பார்க்க ஆள் இல்லை... துணிவு படத்தின் ஷோ கேன்சல் - தமிழ்நாட்டில் அஜித் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?

அஜித் நடித்துள்ள துணிவு படத்தை பார்க்க போதுமான கூட்டம் இல்லாததால் அப்படத்தின் ஷோவை திரையரங்க நிர்வாகம் கேன்சல் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

2 Min read
Ganesh A
Published : Jan 12 2023, 03:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் விஜய்யின் வாரிசு திரைப்படமும் நேற்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இதில் துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்டது. அதேபோல் வாரிசு திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் ரிலீஸ் செய்தது. தமிழகத்தில் இரண்டு படங்களுக்குமே சமமான அளவில் தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.

25

துணிவு படத்திற்கு நேற்று அதிகாலை 1 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதேபோல் விஜய்யின் வாரிசு படத்தின் சிறப்பு காட்சி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த இரண்டு படங்களுக்கும் அமோக வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் 25 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து உள்ளன.

35

தமிழ்நாட்டில் மட்டும் துணிவு படம் ரூ.19 கோடியும் வாரிசு திரைப்படம் ரூ.17 கோடியும் வசூல் ஈட்டி உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் அஜித்தின் துணிவு படம் தான். முதல் நாளில் அதிக கலெக்‌ஷனை அள்ளிய துணிவு படத்துக்கு டிக்கெட் கிடைக்காமல், ஏராளமானோர் அலைமோதிய தகவலை கேள்விப் பட்டிருப்போம். ஆனால் முதல் நாளே படம் பார்க்க ஆள் இல்லாததால் துணிவு படத்தின் ஷோவை கேன்சல் செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

இதையும் படியுங்கள்... போட்டிபோட்டு புதுப்படங்களை ஒளிபரப்பும் சேனல்கள்... டிவி-யில் பொங்கல் ஸ்பெஷல் படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ

45

கரூரை அடுத்த அரவக்குறிச்சியில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அரவக்குறிச்சியில் ஒரே ஒரு திரையரங்கம் தான் உள்ளது. அங்கு அஜித்தின் துணிவு திரைப்படம் மட்டுமே திரையிடப்பட்டது. அப்படத்திற்கான அதிகாலை 1 மணி மற்றும் 4 மணிக் காட்சிகள் ஹவுஸ்புல் ஆக இருந்தபோதும், இதற்கு அடுத்ததாக திரையிடப்பட்ட 7 மணிக் காட்சிக்கு மொத்தம் 17 பேர் மட்டுமே டிக்கெட் வாங்கியுள்ளனர். 

55

இதையடுத்து போதுமான கூட்டம் இல்லாததன் காரணமாக துணிவு படத்தின் 7 மணிக் காட்சியை அந்த திரையரங்க நிர்வாகம் கேன்சல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அலைமோதி வரும் சூழலில் கூட்டமில்லாததால் துணிவு பட ஷோ கேன்சல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... கூடுதல் காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசு... துணிவை தட்டிவிட்டு தாறுமாறாக அதிகரிக்கப்படும் வாரிசு பட ஷோக்கள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved