துளி கூட குறையாத அழகுடன்... 25 வருடத்திற்கு பிறகு தமிழில் ‘கம்பேக்’ கொடுக்கும் பிரபல நடிகை...!
25 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவை விட்டு சென்ற நடிகை அழகில் மெருகேறி மீண்டும் கம்பேக் கொடுக்க உள்ளார்.
திரையுலகைப் பொறுத்தவரை குஷ்பு, ஸ்ரீதேவி போல் டாப்பில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகும் நடிகைகளும் உண்டு, நம்ம த்ரிஷா, நயன்தாரா மாதிரி கலை வாழ்க்கைக்காக கல்யாண வாழ்க்கையை தள்ளி வைப்பவர்களும் உண்டு.
அப்படி கல்யாணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு வெளியேறும் நடிகைகளுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று தான்.
இந்தியில் மட்டுமே திருமணத்திற்கு பிறகும் பல நடிகைகள் தங்களது மார்க்கெட்டை தாங்கிப்பிடித்து தாக்குபிடிக்கிறார்கள். அந்த வாய்ப்பு தமிழ் நடிகைகளுக்கு கிடைப்பது கொஞ்சம் சிரமம் தான்.
இந்நிலையில் 25 வருடங்களுக்கு முன்பு தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை தற்போது மீண்டும் கோலிவுட்டில் கால் பதிக்க உள்ளார்.
தமிழில் வசந்த கால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்தவர் ஷாலி. பார்க்க கொஞ்சம் குஷ்புவையும், சித்தாராவையும் கலந்த மாதிரி இருக்கும் இவர் திருமணத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தலை காட்டவில்லை.
தற்போது தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்து வரும் ஷாலி மீண்டும் தமிழ் சினிமாவில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் நடித்துள்ள கோசுலோ எனும் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வைரலானது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் தயாராகியுள்ள இந்த படத்தில் கிளைமேக்ஸ் மட்டும் மொழிக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.