ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்ந்தால் தான் படவாய்ப்பு..! எழுதப்படாத விதி.. பரபரப்பை ஏற்படுத்திய கமல் பட நடிகை!
ஹீரோக்களுடன் படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே பட வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்றும், இது எழுதப்படாத விதி என பிரபல நடிகை ரவீனா டாண்டன் கூறியுள்ள தகவல் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன்.
இந்த படத்தை அடுத்து அவர், பெரிதாக தமிழ், உள்ளிட்ட பிற மொழிகளில் கவனம் செலுத்தவில்லை. இந்தியிலும் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
தற்போது நடிகர் யஷ் நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில், மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு , கன்னடம், இந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.
இவர் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளதாவது, 90 களில் தனக்கு வந்த பல பட வாய்ப்புகள் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டன. அதற்க்கு காரணம், பாலிவுட் திரையுலகில் ஹீரோவின் வாய்ப்பு வேண்டும் என்றால் ஹீரோக்களுடன் படுக்கையை பகிர வேண்டும் என்பது எழுதப்படாத விதி.
நான் இதற்க்கு ஒரு போதும் சம்மதித்தது இல்லை. எனவே பல படங்களில் இருந்து நீக்கப்பட்டேன்.
மேலும் நான் திமிர்பிடித்தவள் என்றும் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தர மாட்டேன் என மீடியாக்களில் வதந்திகள் பரப்பி விட்டு பல பட வாய்ப்புகளை இழந்ததாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய சினிமா பயணத்தை பலர் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நினைக்கிறார்கள் அவர்களிடம் இருந்து தப்பிப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் ரவீனா கூறியுள்ளார்.
ஏற்கனவே வாரிசு நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரச்சனை பாலிவுட் திரையுலகில் காட்டு தீ போல் பற்றி எரிந்து வரும் நிலையில் தற்போது, படுக்கையை பகிர்ந்தால் தான் வாய்ப்பு என இவர் கூறியுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.