தாதா கதையில் மிரட்ட வரும் பிரியாமணி..!
தமிழில் 'பருத்திவீரன் படத்தில்' நடித்து, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர் நடிகை ப்ரியா மணி.
தமிழில் நிலையான இடத்தை பிடித்தது போல், இவருக்கு தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
திருமணத்திற்கு பின், சில காலம் திரையுலகை விட்டு விலகி இருந்த இவர், தற்போது மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
இந்நிலையில், புதிய திகில் படம் ஒன்றில் இவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்துக்கு 'கொட்டேஷன் கேங்' எங்க பெயர் வைத்துள்ளனர்.
தாதாக்கள் ரவுடிகள் பற்றிய திகில் படமாக உருகுவாக உள்ள இந்த படத்தில் ப்ரியாமணி மிரட்டல் வேடத்தில் நடித்துள்ளாராம்.
இந்த படத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.