இரட்டை குழந்தைகளுக்கு கடவுளின் பெயரை சூட்டி மகிழ்ந்த நடிகை நமீதா.. சிம்பிளாக நடந்த பெயர்சூட்டு விழா photos இதோ
குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ள நமீதா, அதன் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா திரைப்படம் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை நமீதா. இதன்பின் ஏய், விஜய்யின் அழகிய தமிழ்மகன், அஜித்துடன் பில்லா என தொடர்ந்து பல்வேறு முன்னணி ஹீரோக்களின் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து கோலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்தார் நமீதா.
2010-ம் ஆண்டு வரை தமிழ் திரையுலகில் முன்னணி கவர்ச்சி நடிகையாக கோலோச்சி வந்த நமீதாவின் கெரியர் அதன் பின் அப்படியே தலைகீழாக மாறியது. அவரது உடல் எடை அதிகரித்தது தான் இதற்கு முக்கிய காரணம். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில ஆண்டுகள் இருந்து வந்தார்.
இதையும் படியுங்கள்... பா.இரஞ்சித்தின் தங்கலான் படத்துக்காக ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன விக்ரம் - வைரலாகும் நியூ லுக் போட்டோஸ்
இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு வீரா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் ஒருசில படங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில், தற்போது அந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ள நமீதா, அதன் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் தனது மகன்களுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயரிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், மேலும் பதிவிட்டுள்ளதாவது : “இவர்கள் தான் கிருஷ்ணனால் எனக்கு பரிசளிக்கப்பட்ட இரண்டு அழகான குட்டி அதிசயங்கள். எனக்கு கிடைத்த விலைமதிப்பற்ற பரிசு இவர்கள். முன்னதாக கிருஷ்ணனின் பெயரை என் பிள்ளைகளுக்கு சூட்டுவேன் என உறுதியளித்து இருந்தேன்.
எனது நன்றியை காட்டுவதற்கான வழி இது. பெயர்சூட்டு விழா என்னுடைய சொந்த ஊரான சூரத்தில் நடைபெற்றது. எனது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர். உங்கள் அனைவரது அன்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... 10 வருடங்களுக்குப் பிறகு தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ப்ரியாமணி! DR 56 படத்தில் நடிக்க என்ன காரணம்? ஓபன் டாக்