“கனா காணும் காலங்கள்” நடிகைக்கு கல்யாணம் முடிச்சாச்சு... திரைப்பிரபலங்கள் பங்கேற்ற திருமண போட்டோஸ் இதோ...!
கொரோனா காலம் என்பதால் யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பாத ஸ்வேதா காதும், காதும் வைத்த மாதிரி கச்சிதமாக திருமணத்தை முடித்துக்கொண்டு, தற்போது இன்ஸ்டாவில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
கலைஜர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஸ்வேதா சுப்ரமணியம்.
அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
கனா காணும் காலங்கள் சீரியல் இவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. அந்த சீரியல் மூலமாக தான் இவர் நடிகையாக அறிமுகமானார்.
தற்போது விஜய் டி.வி.யில் பிரஜன் நடிப்பில் வெளியாகி வரும் சின்னத்தம்பி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே பல சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் திருமணம், நிச்சயதார்த்தம், குழந்தை பேறு என அடுத்தடுத்து நல்ல செய்தி கூறிவருகின்றனர்.
அந்த வரிசையில் ஸ்வேதாவும் காதலரை கரம் பிடித்து அசத்தியுள்ளார். ஸ்வேதா நீண்ட நாட்களாக காதலித்து வந்த அருண் என்பவருடன் ஜூலை மாதம் 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையடுத்து கடந்த 5ம் தேதி சிம்பிளாக திருமணத்தை முடித்து காதல் கணவருடன் செல்ஃபி எடுத்து வெளியிட்டுள்ளார்.
கொரோனா காலம் என்பதால் யாருக்கும் தொந்தரவு கொடுக்க விரும்பாத ஸ்வேதா காதும், காதும் வைத்த மாதிரி கச்சிதமாக திருமணத்தை முடித்துக்கொண்டு, தற்போது இன்ஸ்டாவில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரை நட்சத்திரங்கள் அதிகம் பங்கேற்ற இந்த திருமணத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்சேதுபதி பங்கேற்றுள்ளார்.
ஸ்வேதா திருமணத்தில் ரோபோ சங்கர்
தோழியுடன் புதுமண தம்பதியின் க்யூட் செல்ஃபி
மனைவியுடன் திருமணத்தில் பங்கேற்ற போஸ் வெங்கட்
சின்னத்திரை பிரபலங்களுடன் அசத்தலான விருந்து
திருமண உற்சாகத்தில் தோழிகளுக்கு போஸ் கொடுக்கும் ஸ்வேதா
கழுத்து நிறைய நகையுடன் அழகு தேவதையாய் மணப்பெண்
கூந்தலில் அழகான பூக்களை கொண்டு அசத்தலான அலங்காரம்
மணப்பெண் கெட்டப்பில் அப்படியே ஒரு செல்ஃபி எடுத்து பார்ப்போம்
மொத்த அலங்காரத்தையும் காட்ட இந்த ஒரு போட்டோ போதும்