செம்ம ஸ்டைலிஷாக வந்து... வேர்த்து விறுவிறுக்க ஓட்டு போட்ட நடிகர் விக்ரம்..!
நடிகர் விக்ரம், பெசன்ட் நகரில் உள்ள வாக்கு சாவடியில் ஓட்டு போட்டு தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் காலை முதலே வாக்களித்து வருகின்றனர்.
தல அஜித், விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முதல் வேலையாக வாக்குச்சாவடிக்கு வந்து தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவு செய்த நிலையில், நடிகர் விக்ரமும் ஓட்டு போட்டுள்ளார்.
பெசன்ட் நகரில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் விக்ரம் வாக்களித்தார்.
வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகள், விக்ரம் வந்ததால்... ரசிகர்கள் கூட்டம் கூடியதை தொடர்ந்து, உடனடியாக அவரை வாக்களிக்க அனுமதித்தனர்.
மேலும் செல்ஃபி எடுக்க முயன்றவர்களுடன், மிகவும் அன்பாக பேசி... புகைப்படங்களையும் எடுத்து கொண்டார்.
வரும் போது செம்ம ஸ்டைலிஷாக இருந்த விக்ரம் ஓட்டு போடும் போது வேர்த்து விறுவிறுக்க தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். மேலும் தொடர்ந்து பல பிரபலங்கள் வாக்களித்து வருகிறார்கள்.