மகள்களுடன் வரிசையில் நின்று வாக்களித்த கமல் ஹாசன்... நடிகர்கள் சூர்யா,கார்த்தி, சிவக்குமார் வாக்களிப்பு...!
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திரையுலகினர் பலரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகள், கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஆகியவற்றிற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் இன்று நடைபெறுகிறது. சட்டமன்றத் தேர்தலில் 3,998 வேட்பாளர்களும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் 12 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். தேர்தல் பணிக்காக 1.58 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கியது. திரைப்பிரபலங்கள் பலரும் காலை 7 மணிக்கே வரிசையில் நின்று வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.
திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித், மனைவி ஷாலினியுடன் தனது வாக்கை செலுத்தினார். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் அவர்களின் தந்தை நடிகர் சிவகுமார் ஆகியோர் தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான கமல் ஹாசன், மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
வாக்களித்ததற்கான அடையாளத்தைக் காட்டிய கமல் ஹாச
வாக்கு மையுடன் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாச