MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Govt Scheme: வங்கி கணக்கில் ரூ.15000 வரவு வைத்த மத்திய அரசு.! உங்களுக்கு வந்து இருக்கா? உடனே செக் பண்ணுங்க.!

Govt Scheme: வங்கி கணக்கில் ரூ.15000 வரவு வைத்த மத்திய அரசு.! உங்களுக்கு வந்து இருக்கா? உடனே செக் பண்ணுங்க.!

EPFO - PMVBRY Benefits - முதல்முறையாக வேலைக்கு சேர்ந்து பிஎப் கணக்கில் இணைந்தவர்களுக்கு ரூ.15,000 இன்று முதல் வரவு வைக்கப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
| Updated : Jun 19 2026, 01:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வங்கி கணக்கில் ரூ.15000 வரவு வைத்த மத்திய அரசு
Image Credit : ChatGPT

வங்கி கணக்கில் ரூ.15000 வரவு வைத்த மத்திய அரசு

நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், இளைஞர்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கவும் ‘பிரதம மந்திரி விக்சித் பாரத வேலைவாய்ப்பு திட்டம்’ கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி தனியார் துறையில் வேலைக்கு சேரும் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.15,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இது முதல்முறை வேலைக்கு சேரும் பணியாளர்களுக்கு மட்டுமல்லாமல் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  Facts: நம்ம போன் நம்பர்ல 10 இலக்கம் ஏன் இருக்கு? 8, 9-னு ஏன் இல்ல? இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பணியாளர்களுக்கான தகுதிகள்
Image Credit : X/Twitter

பணியாளர்களுக்கான தகுதிகள்

ஒருவர் இதற்கு முன் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் எந்த நிறுவனத்திலும் வேலை பார்த்து இருக்கக் கூடாது. முதல் முறையாக வேலை பெற்று, பிஎப் கணக்கில் இணைந்திருக்க வேண்டும். மாத சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்குள் குறைவாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பணியில் இருக்க வேண்டும். வேலையில் இணைந்து ஆறு மாதம் பூர்த்தி செய்தவர்களுக்கு முதல் தவணையில் ரூ.7,500-ம் இரண்டாவது தவணையில் ரூ.7,500-ம் மொத்தம் ரூ.15,000 நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இதையும் படியுங்கள்:  Cashew: ஒரு கிலோ முந்திரி வெறும் 50 ரூபாய் தான்.! இந்த கிராமத்துக்கு போனா மூட்டை மூட்டையா வாங்கலாம்.!

Related Articles

Related image1
Property Law: தந்தை உயில் எழுதவில்லை என்றால் சொத்து யாருக்குப் போகும்? மகள்களின் சட்டப்பூர்வ உரிமை என்ன?
Related image2
Fun Facts: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!
35
நிறுவனங்களுக்கான உதவித்தொகை
Image Credit : our own

நிறுவனங்களுக்கான உதவித்தொகை

அதேபோல் புதிய ஊழியர்களை பணியில் சேர்க்கும் நிறுவனங்களுக்கு ஒரு ஊழியருக்கு மாதம் ரூ.3,000 ஊக்கத்தொகை என இரண்டு ஆண்டுகள் வரை வழங்கப்படும். கடந்த ஏப்ரல் மாதம் 6 மாத பணியை நிறைவு செய்த 4.4 லட்சம் ஊழியர்களுக்கு 446 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அதேபோல் புதிய ஊழியர்களை வேலைக்கு சேர்த்த 18,000 நிறுவனங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த தவணையாக 15 லட்சம் ஊழியர்களுக்கான ரூ.2,400 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.

இதையும் படியுங்கள்:  EB Bill: கரண்ட் பில் ஏறிட்டே போகுதா? மத்திய அரசின் சூப்பர் சோலார் திட்டம் இதோ.! எப்படி விண்ணப்பிப்பது? விரிவான தகவல்கள்.!

45
 63 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம்
Image Credit : our own

63 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கம்

டெல்லி விஞ்ஞான் பவனில் நடக்கும் நிகழ்ச்சியில் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ஊக்கத்தொகை நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் இந்த திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை புதிதாக 63 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதில் 30% பெண்கள் ஆவர். 

இதையும் படியுங்கள்:  PNG: சிலிண்டர் வேண்டாம்.! இனி 24 மணி நேரமும் பைப் மூலம் கேஸ் வரும்.! PNG இணைப்பு வாங்குவது எப்படி?

55
2027 ஆம் ஆண்டு வரை இந்த திட்டம் செயல்படும்
Image Credit : Gemini

2027 ஆம் ஆண்டு வரை இந்த திட்டம் செயல்படும்

இந்தத் திட்டம் 2027 ஆம் ஆண்டு வரை செயல்பட உள்ளது. அதற்குள் மூன்று கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், இதற்கு ரூ.99,446 கோடி செலவிடவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது..

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
அரசு திட்டம்
மத்திய அரசு
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Car sale: வாங்குன விலைக்கே உங்க காரை விற்கலாம்.?! Re-sale Value இருக்குற 5 கார்கள்.!
Recommended image2
Magalir Urimai Thogai Scheme: ஜூலை மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 கிரெடிட்.! உங்களுக்கு கிடைக்குமான்னு செக் பண்ணிக்கோங்க.!
Recommended image3
Petrol, Diesel Price: பெட்ரோல், டீசல் விலை குறைகிறது? மத்திய அரசு கொடுத்த அதிரடி அப்டேட்!
Related Stories
Recommended image1
Property Law: தந்தை உயில் எழுதவில்லை என்றால் சொத்து யாருக்குப் போகும்? மகள்களின் சட்டப்பூர்வ உரிமை என்ன?
Recommended image2
Fun Facts: டைப்-சி சார்ஜரில் உள்ள 'C'-க்கு என்ன அர்த்தம்? 90% பேருக்கு இது தெரியாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved