zodiac signs : கடன் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படும் 6 ராசிக்காரர்கள்
கடன் பிரச்சனை என்பது இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் பெரும் தலைவலியாக இருக்கிறது. சம்பாதிக்கும் பணத்தை விட, சூழ்நிலையாலும் சில தவறான பழக்கங்களாலும் எளிதில் கடன் வலையில் விழும் 6 ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

ரிஷபம் :
இவங்களுக்கு பிராண்டட் பொருட்கள், தரமான வாழ்க்கை முறைன்னா ரொம்ப இஷ்டம். "அடுத்த மாதம் பார்த்துக்கலாம்"னு கிரெடிட் கார்டை தேய்ச்சுட்டு அப்புறம் இஎம்ஐ (EMI) கட்ட திணறுவாங்க. வசதிக்காக வாங்கும் கடனே இவங்களுக்கு வினையாக முடியும். 'ஆசை' வேற, 'தேவை' வேற பாஸ்! பர்ஸ்ல இருந்து கார்டை எடுக்கும் போது ஒரு நிமிஷம் யோசிங்க.
கடகம் :
இவங்க தனக்காக கடன் வாங்குறதை விட, கூட இருக்கிறவங்களுக்காகவும், சொந்தக்காரங்களுக்காகவும் தான் அதிகம் கடன் வாங்குவாங்க. "என் பிரண்ட் கேக்குறான்"னு இவங்க பேங்க்ல லோன் எடுத்து கொடுத்துட்டு, கடைசியில் வட்டி கட்ட முடியாமல் முழிப்பாங்க. பாசம் இருக்கட்டும், ஆனால் மற்றவர்கள் கடனுக்கு நீங்க ஜாமீன் கையெழுத்து போடாதீங்க!
கன்னி :
கன்னி ராசிக்காரங்க ரொம்ப பெர்ஃபெக்ட்னு நினைப்பாங்க. பிசினஸ் பண்ணுறேன், புதுசா முதலீடு பண்ணுறேன்னு பெரிய பிளான் போடுவாங்க. ஆனால், எதிர்பாராத நஷ்டம் வரும் போது, அதை சமாளிக்க வாங்கிய கடனுக்கு மேல் கடன் வாங்கி சுழலில் சிக்கிக்குவாங்க. பேக்-அப் பிளான் (Backup Fund) இல்லாமல் எந்த ஒரு புதிய ரிஸ்க்கான முதலீட்டிலும் இறங்காதீங்க.
விருச்சிகம் :
இவங்க என்ன பிளான் பண்றாங்க, எதுல காசை விடுறாங்கன்னு யாருக்கும் தெரியாது. யார்கிட்டையும் அட்வைஸ் கேட்கவும் மாட்டாங்க. தப்பான ஒரு தொழில்லயோ அல்லது ஷேர் மார்க்கெட்லயோ பிடிவாதமா பணத்தை போட்டுட்டு, அப்புறம் அதை மீட்க கடன் வாங்குவாங்க. பண விஷயத்துல பிடிவாதம் கூடாது. குடும்பத்துல இருக்கிற பெரியவங்ககிட்ட ஆலோசித்து முடிவெடுங்க.
மகரம் :
ஊருக்கு முன்னாடி கௌரவமாக வாழணும், பெரிய வீடு, ஆடம்பர கார்னு பந்தாவாக இருக்கணும்னு நினைப்பாங்க.சமூகத்தில் அந்த அந்தஸ்தை மெயின்டெய்ன் பண்ணுறதுக்காகவே இவங்க வாங்கும் கடன், இவங்களோட தூக்கத்தைக் கெடுத்துடும். வெளியுலகத்துக்காக வாழாதீங்க. உங்க நிஜமான வருமானத்துக்கு ஏத்த மாதிரி பட்ஜெட் போடுங்க.
மீனம் :
"இன்னைக்கு கடன் வாங்கினால் என்ன... நாளைக்கு ஏதாச்சும் மேஜிக் நடந்து காசு வந்துடாதா?" என்கிற கற்பனை உலகத்தில் இருப்பாங்க. பண மேலாண்மை சுத்தமாக வராது. கையில் காசு இருந்தால் செலவழிப்பாங்க, இல்லைனா ஈஸியா கடன் வாங்கிடுவாங்க. ஒரு டைரி வாங்கி தினமும் உங்க வரவு செலவை எழுதி வைங்க. கற்பனையை விட கணக்கு முக்கியம்!

