இந்த 5 ராசிக்காரர்களுக்கு வருங்காலத்தை முன்கூட்டியே அறியும் சக்தி உண்டு
யாராவது பேசும்போது அடுத்து என்ன சொல்வார்கள் என முன்பே தெரிந்திருக்கிறதா? அல்லது கெட்டதை உங்கள் உள்மனது (Sixth Sense) எச்சரித்திருக்கிறதா? ஜோதிடப்படி, இந்த அமானுஷ்ய சக்தி பிறவியிலேயே 5 குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு மிக அதிகமாக இருக்கும்.

விருச்சிகம் :
ராசிகளிலேயே மிக மர்மமான ராசி இதுதான். இவர்களிடம் யாராவது பொய் சொன்னால், அடுத்த சில நொடிகளிலேயே இவர்களின் உள்மனது அதைக் கண்டுபிடித்துவிடும். இவர்களுக்கு வரும் கனவுகள் பெரும்பாலும் நிஜத்தில் அப்படியே நடக்கும். இவர்களுடைய கணிப்புகள் 90% தப்புவதே இல்லை!
மீனம் :
காலபுருஷ தத்துவத்தின் 12-வது ராசியான மீனம், ஆன்மீக உலகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. இவர்களுக்குப் பிரபஞ்சம் கனவுகள் மூலமாகவே வரப்போகும் ஆபத்துகளையோ அல்லது நல்ல விஷயங்களையோ முன்கூட்டியே காட்டிவிடும். "எனக்கு ஏனோ மனசு சரியில்ல, ஏதோ தப்பா நடக்கப்போகுது" என்று மீனம் ராசிக்காரர்கள் சொன்னால், அதை அப்படியே நம்பி அலர்ட் ஆகிவிடுங்கள்!
கடகம் :
சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள், மற்றவர்களின் முகத்தைப் பார்த்தே அவர்களின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை துல்லியமாக எடை போட்டுவிடுவார்கள். ஒரு புதிய இடத்திற்குச் செல்லும் போது அங்கு நெகட்டிவ் எனர்ஜி இருக்கிறதா, பாசிட்டிவ் எனர்ஜி இருக்கிறதா என்பதை இவர்களின் உடல் அதிர்வுகள் உடனே காட்டி கொடுத்துவிடும்.
மிதுனம் :
புதனின் ஆதிக்கம் பெற்ற மிதுன ராசிக்காரர்களுக்குக் கணித ரீதியாகவும், லாஜிக்கலாகவும் சிந்திக்கத் தெரியும். ஒரு விஷயம் தொடங்கும்போதே அதன் முடிவு எப்படி இருக்கும் என்பதை இவர்களின் கண்கள் முன்கூட்டியே ஸ்கேன் செய்துவிடும். இவர்களிடம் ஒரு பிசினஸ் ஐடியா கேட்டால், அதில் எங்கு சொதப்பும் என்பதை முதலிலேயே பிளான் போட்டு உடைத்து விடுவார்கள்.
தனுசு :
ஆன்மீக குருவான வியாழனின் ராசி இது. இவர்களுக்குத் தங்களையும் அறியாமல் திடீரென வாயில் இருந்து வரும் வார்த்தைகள் (வாக்கு பலிதம்) அப்படியே பலித்துவிடும். இவர்களுக்கே தெரியாமல் இவர்களைச் சுற்றி ஒரு தெய்வீகப் பாதுகாப்பு இருக்கும். ஆபத்துகள் இவர்களை நெருங்கும் முன்பே, இவர்களின் புத்தி இவர்களைக் காப்பாற்றிவிடும்.

