நெல்லை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக , இன்று பட்டபகலில் ஆள் நடமாட்டம் உள்ள சாலையில் மூன்று பேர் கொண்ட கும்பல் 26 வயது வாலிபரை வெட்டி படுகொலை செய்துள்ளச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அடுத்த பால் கட்டளை பகுதியைச் சேர்ந்த 26 வயதாகும் பேச்சிராஜன் எனபவருக்கு திருமணமாகி 6 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இவர் தனது குடும்பத்துடன் பால்கட்டளை பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும் இவர் கட்டிட வேலைகளுக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று வழக்கம் போல் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது தச்சநல்லூர் பைபாஸ் சாலையில் வந்துக்கொண்டிருந்த போது, அங்குள்ள சாய்பாபா கோவில் முன்பு பேச்சிராஜனின் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் வழிமறுத்துள்ளது. சுதாரித்துக்கொண்டு அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற பேச்சி ராஜனை அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்துள்ளது. இதில் இரத்த வெள்ளத்தில் விழுந்த பேச்சிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
மேலும் படிக்க:டேட்டிங் பண்ண அழைத்த பெண்.. காட்டுக்குள் சென்ற இளைஞன் - கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !
இதனைதொடர்ந்து சம்பவம் குறித்து அறிந்து வந்த பேச்சிராஜன் உறவினர்கள் உடலை சாலை வைத்து மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர், மறியலை கைவிடும் படியும் உடற்கூறு ஆய்விற்கான உடலை ஒப்படைக்கும் படியும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமரசம் ஆகாத குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடலை கொடுக்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல்துறை துணை ஆணையாளர்கள் ஸ்ரீனிவாசன் மற்றும் அனிதா வந்து , பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், போராட்டத்தை கைவிட மறுத்ததால் போலீசார் உடலை கைப்பற்ற முயன்றபோது போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க:மக்களே உஷார்.. பைக்குகளை ஹைடெக் முறையில் திருடும் பட்டதாரிகள் !
இதனை தொடர்ந்து, உயிரிழந்த நபரின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ் குமார் தலைமையிலான போலீசார் மற்றும் கோட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பொங்கல் தினன்று தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்த மாசானமூர்த்தி எனும் இளைஞர் காணாமல் போன வழக்கில், அவருடன் மது அருந்திய நண்பர்கள் அவரை கொலை உடலை புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில், தற்போது கொலை செய்யப்பட்டுள்ள பேச்சிராஜனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.இது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இன்று பேச்சிராஜன் பட்ட பகலில் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே இது பழிக்கு பழியாக நடந்த சம்பவமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் இக்கொலை சம்பவம் அரங்கேறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அப்பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க:நிர்வாணப்படுத்தி அடிக்கிறாங்க..! அலறி துடிக்கும் ஹரி நாடார்...! மனைவிக்கு பரபரப்பு கடிதம்
