Asianet News TamilAsianet News Tamil

கூட பிறந்த தங்கச்சியை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்.. அதிர்ச்சி சம்பவம்

தங்கையை உடன் பிறந்த அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The incident of rape of younger sister by her own brother has caused shock
Author
First Published Sep 20, 2022, 8:10 PM IST

வேலூர் மாவட்டம், ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் 14 வயது மாணவி. அந்த மாணவி அருகில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறாள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாதபோது அந்த மாணவியை அவளது உடன் பிறந்த அண்ணனே மிரட்டி பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

The incident of rape of younger sister by her own brother has caused shock

மேலும் செய்திகளுக்கு..வெளிநாட்டில் கணவர்.. 25 வயது வாலிபருடன் ஆட்டம் போட்ட 40 வயது பெண் - வயசு பசங்கள வச்சுக்கிட்டு இப்படியா?

தங்கை என்று கூட பார்க்காமல் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட அந்த மாணவி கர்ப்பமாகி இருக்கிறார். 3 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே மாணவியை வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.  அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. 

மேலும் செய்திகளுக்கு..சூப்பர் செய்தி.! நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும்.. அமைச்சர் சொன்ன அசத்தல் தகவல் !

The incident of rape of younger sister by her own brother has caused shock

இந்த செய்தியை கேட்ட அந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை நிர்வாகம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில் உடன் பிறந்த அண்ணனே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் தாயார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios