Asianet News TamilAsianet News Tamil

6 கோடி இன்சூரன்ஸ் பணம்! அரசு ஊழியரின் விபத்து நாடகம்.. துணிவுடன் தூக்கிய போலீஸ்! வேற மாறி சம்பவமா இருக்கே!

அரசு ஊழியர் ஒருவர் இன்சூரன்ஸ் தொகையை பெற மரணம் அடைந்ததாக ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Telangana government staffer fakes death to claim insurance money
Author
First Published Jan 18, 2023, 3:12 PM IST

தெலுங்கானா அரசு ஊழியர் ஒருவர் தனது மரணத்தை போலியாக 6 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையாகக் கோரினார். இதனை கண்டுபிடித்த மேடக் போலீஸார் அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

ஜனவரி 9 ஆம் தேதி கார் விபத்தில் மாலோத் தர்மா என்ற அரசு ஊழியர் மரணம் அடைந்தார். இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மோசடி செய்ய நினைத்த தர்மா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பே இந்த குற்றத்தை திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்தனர். 6 கோடிக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து பிரீமியத்தை முறையாக செலுத்தினார்.

Telangana government staffer fakes death to claim insurance money

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

இருப்பினும், ஜனவரி 12 ஆம் தேதி, காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக அவரது இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக அவர் தனது மனைவியை அழைத்தபோது அவர் உயிருடன் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். தர்மா ஐதராபாத்தில் உள்ள மாநில செயலகத்தில் உதவி பிரிவு அதிகாரியாக பணிபுரிகிறார். இவர் வெங்கடாபூர் கிராமத்தின் பிம்லா தாண்டாவை சேர்ந்தவர்.

ஜனவரி 7ம் தேதி டிரைவருடன் காரில் தனது கிராமத்திற்கு சென்றார். கடந்த ஜனவரி 8 ஆம் தேதி தனது மனைவியிடம் ஹைதராபாத் செல்வதாக கூறிவிட்டு கிராமத்தை விட்டு வெளியேறினார். ஜனவரி 9 ஆம் தேதி, கிராமத்தின் அருகே ஒரு கார் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், காரில் உடல் கருகி கிடந்ததை கண்டனர்.

விசாரணைக்கு பின், இறந்தவர் தர்மா என்ற முதற்கட்ட முடிவுக்கு வந்து, அதன்படி வழக்கு பதிவு செய்தனர் போலீசார். வழக்குப் பதிவு செய்தபோது, அவரது மனைவியும், அவரது தம்பியும் சடலமாக கிடந்தது தர்மாவின் சடலம் என அடையாளம் கண்டுள்ளனர். பின்னர், சந்தேகத்தின் பேரில், தர்மாவின் மனைவியின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து, அவரது போனை கண்காணித்தனர்.

இதையும் படிங்க..2 ஆர்வக்கோளாறுகள்! உருட்டாமல் இருந்தால் சரி! விமான விவகாரத்தில் அண்ணாமலையை கிழித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

Telangana government staffer fakes death to claim insurance money

மூன்று நாட்களுக்கு முன், தர்மா, தன் மனைவிக்கு போன் செய்து, கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இறப்பு சான்றிதழை பெற்று, இன்சூரன்ஸ் நிறுவனத்தில் க்ளைம் செய்ய சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தினார். இதனை போலீசார் கண்டு பிடித்து தர்மாவின் மனைவி மற்றும் அவரது தம்பியை கைது செய்து விசாரித்தனர்.  அப்போது, ஜனவரி 9 ஆம் தேதி கார் தீப்பிடித்ததில் தர்மா இறந்ததாகக் காட்சி அளித்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

அவரது மரணத்தை போலியாகக் காட்டி, தர்மா புனேவுக்குத் தப்பிச் சென்றார். குற்றம் சாட்டப்பட்ட தர்மாவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (எஸ்பி) ரோகினி பிரியதர்ஷினி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ஆன்லைன் கேம்களில் ரூ.1.25 கோடியை இழந்த பிறகு, விரைவாக பணம் சம்பாதிப்பதற்கான சதித்திட்டத்தை தர்மா இப்படி உருவாக்கினார் என்று போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..யார் செய்த சேட்டை.? கர்நாடக வளர்ப்பு மகனை கைது செய்ய வேண்டும்.! விமான விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் சவால்!

Follow Us:
Download App:
  • android
  • ios