Asianet News TamilAsianet News Tamil

அண்ணா என்ன விட்டுடுங்க ப்ளீஸ்! கதறிய 14 வயது சிறுமி! விடாமல் 5 பேர் கூட்டு பலாத்காரம்! வெளியான பகீர் தகவல்.!

சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி. அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி காலை, வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

School Girl Gang Rape... 4 people arrest under in posco
Author
First Published May 1, 2023, 1:27 PM IST

சேலத்தில் 9ம் வகுப்பு மாணவி மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்டம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி. அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி காலை, வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இதையும் படிங்க;- இரவு பகல் பாராமல் டார்ச்சர்! வலி தாங்க முடியாத மனைவி! கணவரின் மர்ம உறுப்பில் இரும்புக் குழாயால் அடித்து கொலை.!

School Girl Gang Rape... 4 people arrest under in posco

இந்நிலையில், மறுநாள் இரவு 9 மணிக்கு மாணவி வீடு திரும்பினார். இதுதொடர்பாக சிறுமியிடம் தந்தை விசாரித்த போது மளிகை கடையில் வேலை செய்து வரும் வினித் (23) என்பவர் தந்தை அழைத்து வர சொன்னதாக கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பி அந்த  மாணவி வினித்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். ஆனால், அந்த சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுவினித், விக்னேஷ் (21), சீனிவாசன் (23), ஆகாஷ் (19), அருண்குமார் (28)  ஆகியோர் சேர்ந்து கதறியும் விடாமல் மிரட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

இதையும் படிங்க;- நைட்டானாவே ஒரே டார்ச்சர்.. வலி தாங்க முடியாமல் ஆத்திரத்தில் கணவனை எரித்து கொன்ற மனைவிக்கு ஆயுள்தண்டனை..!

School Girl Gang Rape... 4 people arrest under in posco

பின்னர், இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு வீட்டின் அருகே விட்டு விட்டு வினித் சென்றார். இதனை வீடியோ எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதுபற்றி சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தந்தை புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் 5 பேர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios