MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • குற்றம்
  • இரவு பகல் பாராமல் டார்ச்சர்! வலி தாங்க முடியாத மனைவி! கணவரின் மர்ம உறுப்பில் இரும்புக் குழாயால் அடித்து கொலை.!

இரவு பகல் பாராமல் டார்ச்சர்! வலி தாங்க முடியாத மனைவி! கணவரின் மர்ம உறுப்பில் இரும்புக் குழாயால் அடித்து கொலை.!

குடிபோதையில் ஓயாமல் டார்ச்சர் செய்து வந்த கணவனை மர்ம உறுப்பில்  இரும்புக் குழாயால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
vinoth kumar
Published : May 01 2023, 09:51 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டை அடுத்த விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் வீரய்யன்(35). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அபிராமி (31) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. 

25

குடிப்பழக்கத்துக்கு அடிமையான வீரய்யன் பகல், இரவு என்று பாராமல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியை அடித்து உதைத்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல நேற்று முன்தினமும் இரவு போதை தலைக்கேறிய நிலையில் தள்ளாடியபடி வீட்டிற்கு வந்து மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார். 

35

இதனால் ஆத்திரமடைந்த மனைவி அபிராமி அருகே இருந்த இரும்புக் குழாயை எடுத்து கணவரின் மர்ம உறுப்பில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வீரய்யன் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அபிராமி அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார். 

45

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீரய்யன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

55

இதனையடுத்து தலைமறைவாக இருந்த மனைவி அபிராமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தொடர்ந்து மனைவியை மர்ம உறுப்பில் இரும்புக் குழாயால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved