Asianet News TamilAsianet News Tamil

“நரிக்குறவர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமி..” வைரல் வீடியோ !

நரிக்குறவர் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமியை குடும்பத்தினர் அனைவரும் அடித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Kanyakumari colachel bus stand Narikuruvar family slap a man viral video
Author
First Published Aug 21, 2022, 5:47 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பேருந்து நிலையத்தை வாழ்விடமாக அமைத்துக்கொண்ட குருவிக்கார குடும்பம் ஒன்று சுற்றுவட்டார பகுதியில் ஊசி பாசிமணிகளை விற்பனை செய்து விட்டு வருகின்றனர். விற்பனை செய்து முடித்துவிட்டு குளச்சல் பேருந்து நிலையத்தில் தூங்குவது வழக்கம். 

Kanyakumari colachel bus stand Narikuruvar family slap a man viral video

அப்படி தூங்கும் அந்த குடும்பத்தை சேர்ந்த பெண்களை விடியற்காலையில் போதையில் வரும் மர்ம ஆசாமி ஒருவர் தினம்தோறும் பாலியல் தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது. அவர்கள் சத்தம் போடவே அங்கிருந்து தப்பி செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. இன்று விடியற்காலையிலும் பேருந்து நிலையம் வந்த அந்தப் போதை ஆசாமி தூங்கி கொண்டிருந்த குருவிக்கார பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..அச்சச்சோ..Google Pay, Phonepe யூஸ் பண்றீங்களா நீங்க ? இனிமே எல்லாமே கட்டணம் தான் !

அந்தப் பெண் சத்தம் போடவே விழித்து கொண்ட குருவிக்கார குடும்பத்தினர் அந்தப் போதை ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்து குடும்பத்தினரோடு சேர்ந்து தர்ம அடி போட்டனர். இதைக் கண்டு அங்கு திரண்ட பொதுமக்கள் குருவிக்கார குடும்பத்தினரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்த நிலையில் தாக்குதலில் மண்டை உடைந்த போதை ஆசாமியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல விசாரித்து உள்ளனர்.

Kanyakumari colachel bus stand Narikuruvar family slap a man viral video

அப்போது அந்த நபர் கோடிமுனை பகுதியை சேர்ந்த ராஜ் என்பவர் என தெரியவந்தது. ‘குருவிக்கார குடும்பத்தையே கடலில் தூக்கி போடுவேன்’ என சவால் விட்டு நின்று கொண்டிருந்தார் அந்த நபர். இந்த தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு..தலையில் காயம்.. காண்டத்தை வைத்து கட்டு போட்ட வார்டு பாய் - அதிர்ச்சி சம்பவம்.!

Follow Us:
Download App:
  • android
  • ios