Asianet News TamilAsianet News Tamil

பார்த்ததுமே பத்திக்கிச்சு.. 20 வயது இளைஞரை கரெக்ட் செய்து உல்லாசம்.. வெளியே கசிந்த கள்ள உறவால் நடந்த அதிர்ச்சி

சொந்த ஊருக்கு வந்து செல்லும்போது அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் வல்லரசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. 

illegal love... College student commits suicide in namakkal
Author
First Published Sep 12, 2022, 10:13 AM IST

கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானத்தில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பெரகரநாடு அருவங்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லம். இவரது மனைவி புஷ்பா. இவரது மகன் வல்லரசு (20). பரமத்திவேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வந்தார். செல்லம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இதனால் குடும்ப வறுமையின் காரணமாக தாய் புஷ்பா கேரளாவுக்கு எஸ்டேட்டில் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். வல்லரசு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இதையும் படிங்க;- ஆண்டிகளின் பின்புறத்தை தட்டி ரசித்த இளைஞர்.. இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த போது வசமாக சிக்கி சின்னாபின்னம்..!

illegal love... College student commits suicide in namakkal

இந்நிலையில், சொந்த ஊருக்கு வந்து செல்லும்போது அப்பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணுடன் வல்லரசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் அந்த பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. 

illegal love... College student commits suicide in namakkal

இதனையடுத்து, மனைவியை கண்டித்துள்ளார். இதனிடையே கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியவந்ததால் அவமானம் அடைந்த வல்லரசு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்த போது  வல்லரசு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதுதொடர்பாக அப்பகுதியினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வல்லரசு உடலை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் இறந்த செய்தியை அறிந்து தாய் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  அடச்சி.. குடிபோதையில் ஒரு அப்ப பொண்ணு கிட்ட செய்ற வேலையை இது.. கருமம் கருமம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios