தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). திசையன்விளையில் உள்ள டைல்ஸ் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். குடிக்கி அடிமையானவர். இவரது மனைவி சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவதால் சரவணன் மகளுடன் வசித்து வந்தார். 

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுத்த புகாரில் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (40). திசையன்விளையில் உள்ள டைல்ஸ் கடையில் கூலி வேலை செய்து வருகிறார். குடிக்கி அடிமையானவர். இவரது மனைவி சென்னையில் தங்கி வேலை பார்த்து வருவதால் சரவணன் மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், மது அருந்தி விட்டு வீட்டிற்கு வரும்போதெல்லாம் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். நாளுக்கு நாள் தந்தையின் அத்துமீறல் அதிகரித்துள்ளது.

இதனால், பொறுமை இழந்த மகள் இதுகுறித்து ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணன் மதுபோதையில் கடந்த 4 ஆண்டுகளாக பெற்ற மகளிடம் வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.