Asianet News TamilAsianet News Tamil

ஆண்டிகளின் பின்புறத்தை தட்டி ரசித்த இளைஞர்.. இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த போது வசமாக சிக்கி சின்னாபின்னம்..!

சென்னை மயிலாப்பூர் சி.பி.ராமசாமி சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் சைக்கிளில் சென்றார். அப்போது வந்த மர்ம வாலிபர் ஒருவர் மாணவியை பின் தொடர்ந்து வந்து பின்புறத்தை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டு விட்டு வேகமாக தப்பித்து சென்றுவிட்டார்.

abusing womens..Youth Arrest in chennai
Author
First Published Sep 10, 2022, 7:48 AM IST

தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து அநாகரிகமாக நடந்து கொண்டு பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் சி.பி.ராமசாமி சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ஒருவர் சைக்கிளில் சென்றார். அப்போது வந்த மர்ம வாலிபர் ஒருவர் மாணவியை பின் தொடர்ந்து வந்து பின்புறத்தை கிள்ளி சில்மிஷத்தில் ஈடுபட்டு விட்டு வேகமாக தப்பித்து சென்றுவிட்டார்.

இதையும் படிங்க;- எந்நேரமும் ஓயாமல் ஆண் நண்பருடன் செல்போனில் கடலை.. கடுப்பான கணவர் செய்த பகீர் சம்பவம்..!

abusing womens..Youth Arrest in chennai

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி இதுகுறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் கோட்டூர்புரம் சித்ரா நகர் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (5) என்பவர் கல்லூரி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிந்தது.

abusing womens..Youth Arrest in chennai

 இதேபோல் அவர் மயிலாப்பூர் பகுதியில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து பல பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு பாலியல் அத்துமீறிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர் 25-க்கு மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதையடுத்து தனுசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படிங்க;-  விடிந்தால் திருமணம்.. ஓட்டம் பிடித்த மணப்பெண்.. நேரம் பார்த்து பழிதீர்க்க மாப்பிள்ளை வீட்டார்.. நடந்தது என்ன?

Follow Us:
Download App:
  • android
  • ios