Asianet News TamilAsianet News Tamil

காதலன் கண் முன் காதலி கூட்டு பாலியல் வன்கொடுமை… காஞ்சிபுரம் அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

காஞ்சிபுரம் அருகே சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த காதலன் கழுத்தில் கத்தி வைத்து அவருடன் இருந்த பெண்ணை மதுபோதையில் வந்த 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

girlfriend sexually assaulted by four mens in front of her boyfriend at kanchipuram
Author
First Published Jan 13, 2023, 6:42 PM IST

காஞ்சிபுரம் அருகே சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த காதலன் கழுத்தில் கத்தி வைத்து அவருடன் இருந்த பெண்ணை மதுபோதையில் வந்த 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் விப்பேடு கிராம பகுதியை ஒட்டிய வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலை பகுதியில் ஒரு காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தது. வந்தவாசி - கீழம்பி புறவழிச்சாலை புறவழிச்சாலை சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் வகையில் அமைந்துள்ளதால், இந்த சாலையை ஒட்டி பெட்ரோல் நிலையங்கள் உணவகங்கள், தனியார் பள்ளிகள், புதிய குடியிருப்பு பிளாட்டுக்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ஆசைவார்த்தை கூறி உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டி இளம்பெண்ணை சீரழித்த சிறை வார்டன்கள்.!

அவ்வாறு இருக்கும் பிளாட் ஒன்றின் அருகே தான் இந்த காதல் ஜோடி நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு மதுபோதையில் வந்த 4 இளைஞர்கள் காதலனை கத்தியை காட்டி மிரட்டி பெண்ணை பலவந்தமாக தூக்கி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையும் படிங்க: திருச்சியில் 5 பவுன் நகைக்காக செவிலியர் கொலை; பெண் கைது

இதுக்குறித்து தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ததோடு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்களை கைது செய்தனர். காதலின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி அவருடன் வந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios